Thursday, December 04, 2003

செவ்வாய் பற்றிய புதிய தகவல்...

ஐரோப்பிய விண்ணியல் ஆய்வு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்வாயை நோக்கிய அனுப்பிய கலம் செவ்வாயில் இருந்து சுமார் 3.4 மில்லயன் மைல்களுக்கு அப்பால் இருந்து செவ்வாயைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது....!இந்தப்படத்தை ஆய்வு செய்த போது செவ்வாயின் மேற்கு அரைக்கோளம் கூடிய ஒளிர்வுத் தன்மையுடன் காணப்படுவதாகவும் செவ்வாயின் மூன்றில் ஒரு பகுதி இருள் அடைந்த பகுதியாகத் தென்படுவதாகவும் இவற்றில் வடக்குத் தாழ்வுப் பகுதி முன்னர் சமுத்திரங்களால் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்...!எப்படியாயினும் இக்கலமும் ரோவர் ஒன்றும் வரும் கிறிஸ்மஸ் காலத்தில் செவ்வாயை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 8:55 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க