Friday, December 12, 2003

பூமியின் காந்த மண்டலத்தின் விதி......

பூமியின் காந்த மண்டலம் கடந்த 150 வருடங்களில் 10 சதவீதத்தால் பலவீனம் அடைந்துள்ளதாகவும் இந்த பலவீன விகிதத்தில் காந்த மண்டலம் தொடர்ந்து பலவீனமானால் பூமியின் முழுக் காந்த மணடலமும் இன்னும் 1500 தொடக்கம் 2000 வருடங்களுக்குள் முற்றாக பலமிழந்து விடும் என்றும் அமெரிக்க கவாட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்....!

இந்த காந்த மண்டலப்பலவீனம் தென் அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேல் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது...இதனூடாகவே பூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் தமது மின் காந்த அலைகளை பூமிக்கு அனுப்பி வருகின்றனவாம்....! இந்தக் காந்த மண்டல அழிவு பூமிக்குள் பலமான மின்காந்த அலைகள், மின்னேற்றம் பெற்ற துணிக்கைகள் தடையின்றி உள் வர உதவி அளிக்கும் என்றும் இவை உயிரினங்களுக்கும் பூமிக்கும் அதன் காற்றுமண்டலக் கட்டமைப்புக்கும் ஆபத்தானவை ஆகவும் அமையலாம்....!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 2:07 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க