Thursday, January 08, 2004

Spirit Rover -ஸ்பிரிட் ரோவர்

நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ஸ்பிரிட் ரோவர் அதனை செவ்வாயின் காற்றுமண்டலத்தில் காவிச்சென்று பத்திரமாக இறக்கிய காற்றுப்பைகளினுள் சிக்கி நகர்ச்சி இன்றி இருக்கிறது...இன்னும் சில தினங்களில் அதன் நகர்ச்சி உறுதி செய்யப்பட்டு அதன் தொழிற்பாடு தொடரப்படும் என்று நாசா பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஸ்பிரிட் ரோவர் கொண்டுள்ள கூரிய கருவிகளின் உதவி கொண்டு செவ்வாயின் தரைத்தோற்றமும் அதன் இராசாயனத்தன்மையும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இதற்கிடையே ஸ்பிரிட் ரோவரின் வெற்றிக்குப் பின் நாசாவும் வெள்ளைமாளிகையும் மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவது பற்றி பரிசீலிக்கவுள்ளனவாம்....!

செவ்வாயின் கதை இப்படி இருக்க பூமியில் சூழல் மாசடைவதால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இன்னும் 50 வருடங்களுக்குள் பல அரிய உயிரினங்கள் அழிந்துவிடப் போகின்றன என விஞ்ஞானிகள் இன்று எச்சரித்துள்ளனர்...இந்த சூழல் மாசடைதலில் அமெரிக்கப் பக்களிப்பே பாரியது என்பதும் இதனைத்தடுக்க அமெரிக்கா தனது பூரண ஒத்துழைப்பை நல்க மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது...உள்ளதைப் பாலவனாமாக்கிக் கொண்டு பாலவனத்தில் கொடி நடும் அமெரிக்காவை என்னென்பது...???!

ஸ்பிரிட் ரோவர் பற்றி அறிய இங்கு அழுத்தவும்

பதிந்தது <-குருவிகள்-> at 8:00 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க