Wednesday, February 02, 2005

தலைமுடி அலங்காரம் தரும் ஆபத்து...!



தலைமுடிக்கு நிறமூட்டிய பெண்

உலகில் ஆண்கள், பெண்கள் என்று தலை முடியலங்காரம் செய்வதென்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் இவ்வேளையில் தலைமுடிக்கு நிறமூட்ட அல்லது நீட்டப் பயன்படும் இரசாயனப் பொருட்களின் பக்க விளைவால் பலர் தங்கள் உண்மை அழகை இழந்து வரும் நிலை உலகில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவை அரிப்பு, சொறிவு, வீக்கம், விகாரம் போன்ற நோய் அறிகுறிகளைக் காண்பிக்கவும் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...!



Anaphylaxis - ஒவ்வாமை (Allergy) அறிகுறிக்கு இலக்கான பெண் : PPD ஒவ்வாமைக்கு இலக்கான பெண்

(Anaphylaxis is a severe allergic reaction that results from the interaction of an allergen (see causes below) with specific immunoglobulin E (IgE) antibodies bound to mast cells in the skin and lungs and basophils in the blood. The mast cell releases chemicals that act on blood vessels to produce a wide range of clinical effects throughout the body.)

சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமுடிக்கு கலரூட்ட முனைந்து நிர்ப்பீடன ஒவ்வாமைக்கு இலக்காகி இங்கிலாந்தில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணமானார் (38-year-old, Mrs Narinder Devi, Devi had died of a "massive" anaphylactic reaction.)...தற்போது பலர் முகம், தோல் என்று விகாரத்தைச் சந்தித்து வருகின்றனர்...! தலைமுடி நிறமூட்டிகளில் உள்ள para-phenylenediamine (PPD) எனும் நச்சுப் பதார்த்தமே இந்த வகையான ஒவ்வாமை விளைவுகளுக்கு முக்கிய காரணம் என்றும் PPD யும் தலை முடி நிறமூட்டிகளில் காணப்படும் இன்னோர் இரசாயனக் கூறான tetrahydro-6-nitroquinoxaline எனும் இரசாயனமும் சேர்ந்து உடற்கலங்களில் உள்ள டி என் ஏ எனும் பிறப்புரிமையியல் பதார்த்தத்துடன் தாக்கமுற்று விகாரங்களை தோற்றுவித்து புற்றுநோய் தோன்ற வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்...!

உலகில் மேற்குலக நாடுகளில் மட்டுமன்றி கீழத்தேய நாடுகளிலும் தலை முடிக்கு நிறம் தீட்டுதல், நீட்டுதல் பெரும்பாலும் பெண்கள் மத்தியில் ஒரு தீராத வியாதியாக இன்று வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது...! பண்டைய காலத்தில் இயற்கையாகக் கிடைத்த மூலிகை எண்ணெய்கள் மூலமே தலைமுடிகள் கறுகறுவென்று விளங்கவும் ஆராக்கியமாக வளரவும் வழிவகைகளை கீழத்தேய மக்கள் பேணி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...! இயற்கைத்தனம் அழிந்து செயற்கைத்தனம் சேர நோய்களும் செயற்கையுடன் கூடவே பரிசாகின்றன போலும்...பெண்களே ஆண்களே இவை குறித்து இன்றே சிந்திப்பீராக....!

ஆதார இணைப்பு
ஆதார இணைப்பு
ஆதார இணைப்பு

பதிந்தது <-குருவிகள்-> at 8:55 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க