புதிய ஏவாளின் தோட்டம்..!
ஆய்வின் போது கண்டறியப்பட்ட தேன் குடிக்கும் புதிய இனப் பறவை..!
Papua 'Eden' என்று அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவைகளும் மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ள மலைசார்ந்த இடம்..!
ஆய்வில் ஈடுபட்டவர்கள் தங்கி இருந்த இடம்..!
மேலதிக தகவல் இங்கு
Labels: உயிரியல்
3 மறுமொழிகள்:
அறிவியல் செய்திகளை அருமையாகப் பதிக்கிறீர்கள். நன்றி, தொடரவும்.
நல்ல பதிவுகள் அழகான வலையமைப்பு.
கலைவாணி
சிறில் அலெக்ஸ்..மற்றும் கலைவாணி உங்கள் இருவரினதும் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்..! தொடர்ந்து வாங்க படியுங்க பயன்பெறுங்க. எங்களால முடியுறப்போ எல்லாம் அப்டேட் பண்ணுவங்க..!