இந்தியாவில் புதிய இனப் பறவை கண்டுபிடிப்பு.
கண்டுபிடிக்கப்பட்ட பறவை.
இந்தியாவில் 50 வருடங்களின் பின் மிக அழகான சிறிய, புதிய இனப்பறவை ஒன்று இந்தியாவின் வட-கிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது. Bugun Liocichla எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பறவையினத்தில் எண்ணிக்கையில் வெறும் 14 வரையிலான பறவைகள் தானாம் எஞ்சியுள்ளன என்று இந்திய பறவையியலாளர்கள் சஞ்சிகை தெரிவிக்கின்றது. இது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே இந்திர விண்ணாய்வாளர் ஒருவரின் கண்ணில் சிக்கிய போதும்...மிகச் சமீபத்தில் (இவ்வாண்டு - 2006- வைக்காசி - மே - மாதத்தில்) தான் இதை மீண்டும் அவதானிக்க முடிந்துள்ளது. அதன் பின்னரே இதன் இனத்துவ அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளது..!
இந்தப் பறவையினங்கள் மத்திய சீனாவில் உள்ள மலைப்பகுதியில் சிறிய எண்ணிக்கையில் வாழும் Liocichla எனும் சாதிப் பெயரால் குறியிடப்படும் அரிய பறவை இனத்தின் நெருங்கிய உறவுகளாக இருக்கலாம் என்றும் கருத்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இப்பறவை இனங்காணப்பட்ட இடம்
மேலதிக தகவல் இங்கு.
படம் - reuters.com (News agency)
4 மறுமொழிகள்:
Good posting Kuruvikal. you are a talented person..
. please give more contribution in tamil blogs.. dont waste your energy with psyho narathar and other vetti paghu gangs in yarl.
நீங்கள் யாரோ நாமறியோம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.
வெளியாரைப் பற்றிப் பேசுவதிலும் இங்குள்ள விடயங்களைப் பேசுவதே..அதுவும் தமிழில் பேசுவதே தமிழுக்கும்..தமிழுலகுக்கும் நமக்கும் அழகு..!
உங்கள் வரவுக்கு நன்றிகள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..இங்குள்ள விடயங்கள் சம்பந்தமான விமர்சனங்களையும் நல்குங்கள். தவறுகள் சுட்டிக்காட்டப்படுதலும் வரவேற்கப்படுகிறது.
நட்புடன் குருவிகள்.
மன்னிக்க வேண்டும் குருவிகள். நான் ஒரு இந்திய தமிழன்.. உங்கள் கவிதைகளை மற்றும் பல தகவல்களை யாழ் களத்தில் படித்தது உண்டு. ஆனால் சில நாட்களா சில மனிதர்கள் தங்களை அவமானபடுத்துவதை கண்டு மன்ம் புழுங்கி இருந்தேன்.. கற்றவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு. கூட்டை விட்டு பறந்து தமிழ் மணத்தில் மேலும் சிறகடித்து பறக்க் என் வாழ்த்துக்கள். தங்களின் புதிய கவிதை யாதேனும் பதிவுக்கலாமே
மன்னிப்பு எல்லாம் எதற்கு. அதெல்லாம் பெரிய வார்த்தைகள். நாங்கள் கருத்துப்பகரும் நண்பர்கள்..நமக்கிடையில் மன்னிப்பு எல்லாம் வேண்டாம். வளமான கருத்துப் பகிர்வுகளும் அதனால் நாம் சார்ந்த மொழிக்கும்..சமூகத்துக்கும் சிறிய நன்மை கிட்டினாலே போதும்.
தகவல்கள் பிறரை சென்றடையும் அதேவேளை சிந்திக்க வைக்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை அப்படியே கேட்டிட்டு போக வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது. அப்படியான சமூகத்தில் சுயசிந்தனையின் பாலான..வளர்ச்சியும் முயற்சியும் பெரிதாய் அமையாது. சிந்திக்கத் தூண்டுவதே அவசியம்.தீர்மானிப்பது அவர்களாக இருக்க வேண்டும்.. அதுதான் பலம் சமூகத்துக்கு..!
எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கவிதைகளும் பதிவோம். உங்களின் குருவிகள் சார்ந்த படைப்புக்கள் மீதான அக்கறைக்கு நன்றிகள்.
நட்புடன் குருவிகள்.