Thursday, November 08, 2007

பெண்களின் கவர்ச்சியான நடைக்கும் கருக்கட்டல் விருப்புக்கும் பெரிய தொடர்பில்லை.



மனிதனும் விலங்குதானே. அதில் பெண் விலங்கு ஆண் விலங்கை எப்படி தனது கருக்கட்டல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக் கவர்வது என்பதற்கு இயற்கையாகவே சில நடத்தைக் கோலங்கள் பெண்களுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று நடை.

பொதுவாக பெண்கள் தங்கள் நடையை வைத்து ஆண்களைக் கவர்தல் என்பதைச் செய்வதாக தீர்மானிப்பது வழக்கம். குறிப்பாக அதிகம் இடுப்பை அசைத்து நடத்தலை கவர்ச்சி மிக்க நடை என்பர். ஆனால் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கருக்கட்டலுக்கு தயாரான பெண்கள் இடுப்பை அதிகம் அசைத்து நடப்பதில்லை என்றும் கால்களை ஒடுக்கி நடக்கின்றனர் என்றும் கொஞ்சம் மாறுபாடான விடயம் வெளிப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி பெண்களில் இருந்து வெளிவரும் வாசனை மற்றும் அவர்களின் முகப்பாவங்களூடு அவர்கள் அதிகம் தங்கள் கருக்கட்டலுக்குரிய விருப்பை நெருங்கிய நிலையில் இருந்து உணரக்கூடிய காரணிகளூடு ஆண்களைகளுக்கு தெரியப்படுத்துகின்றனர் என்பதுடன் பெண்கள் பொதுவாக ஒரு ஆணுடம் இணைந்தே தமது சந்ததியை உருவாக்க விரும்புகின்றனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது. இது மனிதன் Monogamy நிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைக்குள் இருக்க விரும்புவதை அதிகம் வெளிப்படுத்துவதாக ஆய்வு சொல்கிறது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 9:42 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க