கடும் மனச்சோர்வு பாதிக்கும் வயதென்ன..?!
மனச் சோர்வால் பாதிக்கப்பட்ட பெண்
ஒருவரின் 44 வயதில் மனச்சோர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறது ஆய்வு
இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தொடர்பிலான செய்திகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சுமார் எண்பது நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், மனிதர்களில் பெரும் பாலானவர்களுக்கு, 40 வயதாகும் போது மனச்சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 44 வயதில், இந்த மனச்சோர்வு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஆண், பெண், ஏழை, பணக்காரன், திருமணம் ஆனவர், ஆகாதவர், குழந்தைகளை பெற்றவர், பெறாதவர் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லாதரப்பினரையும், அவர்கள் 40 வயதை கடந்த பிறகு, இந்த மனச்சோர்வு பாதிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் இப்படி மத்திய வயதாகும்போது மனச்சோர்வால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களையும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மூலம்: bbc/tamil
Labels: உடலறிவியல்
0 மறுமொழிகள்: