Sunday, February 24, 2008

தாவர எண்ணெயை எரிபொருளாக கொண்டு முதல் விமானம் பயணம்.



தாவர எண்ணெயை ஒரு பகுதி பயன்படுத்திக் கொண்டு வர்த்தக விமானம் ஒன்று முதல் முறையாக ஒரு பயணம் பறந்து முடித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம் ஒன்று அதன் 4 எந்திரங்களில் ஒன்று தாவர எண்ணெயில் இயங்கிச் செயற்படட்டு லண்டனிலிருந்து அம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்துள்ளது.

தாவர எண்ணெயால் கார்பன் புகை அளவு குறையும், குறையாது என்ற வாதப் பிரதிவாதங்களையும், தாவர எண்ணெய்க்கான பயிரீடு அதிகரித்தால் அது உணவுப் பயிர் செய்கையைப் பாதித்து உணவுப் பொருள் விலைகளை அதிகரிக்கும் என்ற முறைப்பாடுகளையும் இந்தப் பறத்தல் கிளப்பியுள்ளது.

செய்தி மூலம்:- bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க