Thursday, March 27, 2008

'கணணி விளையாட்டுகளாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டு' - ஆய்வு



கணினியில் குழந்தைகள் விளையாட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, புதிய தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க வாய்ப்புகளை குழந்தைகளுக்கு வழங்கினாலும், டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் பற்றியும் பெற்றோர் அறிந்துவைத்துக்கொள்ளுதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டை தயாரித்த மனோதத்துவ நிபுணர் தான்யா பைரன் அவர்களின் கருத்துப்படி, குழந்தைகளைத் தனியாக கம்பியூட்டரில் விளையாடவிடுவது என்பது கண்காணிப்பு மேற்பார்வை இல்லாமல் அவர்களை தனியே வீட்டுக்கு வெளியில் விளையாட விடுவதைப் போன்றதே என்று குறிப்பிட்டுள்ளது.

கணினி விளையாட்டுகள் தரப்படுத்தப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும், அவை விளம்பரம் படுத்தப்படுவது குறித்து விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கணினி இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அறிவூட்ட பிரச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:21 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க