Wednesday, September 10, 2008

பெருவெடிப்புச் சோதனை. (பிந்திய செய்தி)



ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.

இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.

இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

தமிழில் தகவல் பிபிசி/தமிழ்.

மேலதிக பிந்திய தகவல் இங்கு.

(இப்பதிவின் பின்னூட்டலிலும் புதிய தகவல்கள் இடப்பட்டுள்ளன.)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:52 pm

1 மறுமொழிகள்:

Blogger kuruvikal விளம்பியவை...

இப்பரிசோதனையின் பிந்திய நிலவரவப்படி.. இரண்டு புரோத்தன் கற்றைகளும் எதிர் எதிர் தசைகளில் இருந்து நேர்த்தியாக 27 கிலோமீற்றர்கள் பருதி கொண்ட LHC வழி செலுத்துவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு கற்றைகளும் இன்னும் மோதலுக்கு உட்படுத்தப்படவில்லை.

முதலாவது புரோத்தன் கற்றை வலஞ்சுழியாக
0930 BST க்கும் இரண்டாவது புரோத்தன் கற்றை இடஞ்சுழியாக 1400 BST க்கும் தனித்தனியே இயக்கப்பட்டுள்ளன்.

இரண்டு கற்றைகளையும் எப்போது மோதச் செய்வார்கள் என்று CERN இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. எனினும் குறைந்த சக்தி மொத்துகைகள் முதலில் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm

Thu Sept 11, 12:04:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க