செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.
செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.
மேலதிக தகவல் இங்கு.
--------------
இதற்கிடையே பிறிதொரு ஆய்வில்.. பெண்கள் அதிக அளவில் மதுபானம் அருந்துவதால் அவர்களுக்கு ஈரல் புற்றுநோய் அல்லது ஈரல் நோய்களுக்கு மேலதிகமாக மார்பகப் புற்றுநோயும் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பதுடன் பல பெண்கள் இது பற்றிய அறிவின்றி அளவுக்கு அதிகமான மதுபானத்தை அருந்தி வருகின்றனர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் இங்கு.
Labels: ஒவ்வாமை, செல்லிடத் தொலைபேசி, பெண்கள், மதுபானம், மார்பகப் புற்றுநோய்
0 மறுமொழிகள்: