Tuesday, February 10, 2009

ஆண்கள் பெண்களால் கொடுமைக்குள்ளாகின்றனர் - ஆய்வு.



பெண்ணடிமை, பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம், ஆணாதிக்கம் என்ற பதங்களை பாவிப்பதும் பேசுவதும் புரட்சிகரமானவை என்றிருந்த காலம் போய் பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவது குறித்துப் பேசும் நிலை உலகில் தோன்றி இருக்கிறது.

இது இன்று நேற்றல்ல பல காலமாகவே நாலு சுவருக்குள் நடந்து வந்த சமாச்சாரம் தான். ஆனால் அது ஆணாதிக்கம் என்ற பதப்பிரயோகம் கொண்டு மலினப்படுத்தப்பட்டு பெண்கள் மீதான கரிசணையின் பால் புறக்கணிக்கப்படும் நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் பெறப்பட்ட கருத்துக்கணிப்புப் படி 20 - 24 வயதெல்லையில் இருக்கும் பல ஆண்கள் அவர்களின் பெண் துணைகளால் கொடுமைப்படுத்தப்படும் விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பெளதீக அளவில் அன்றி வார்த்தைகளால் அவர்கள் அதிகம் கொடுமைக்குள்ளாக்கப்படுவதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வயதெல்லையில் 6.4% ஆண்கள் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் அதேவேளை பெண்களில் 5.4% வீதத்தினரே கொடுமைகளுக்கு இலக்காகின்றனர்.

இருப்பினும் மொத்தமாக எல்லா வயதெல்லையினரையும் உள்ளடக்கி நோக்கும் போது, பெண்களே இன்னும் அதிக அளவில் கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு. பெண்கள் மீண்டும் மீண்டும் வன்முறைத்தனமான கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என்று கூறும் ஆய்வாளர்கள் ஆண்களும் பெண்களால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் அது புறக்கணிக்கப்பட்டக் கூடிய ஒன்றாக இல்லை என்றும் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக 6 இல் 1 ஆண் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் அதேவேளை 4 இல் 1 பெண்ணும் கொடுமைக்கு இலக்காவதாகக் கூறுகிறது இவ்வாய்வு.

இது ஆண் - பெண் சம உரிமை கொண்டதாகக் கருதப்படும் பிரித்தானிய சமூகத்தில் இருந்து பெறப்பட்ட ஆய்வின் பிரகாரம் அமைந்த முடிவாகும். ஆனால் இதை விட மோசமாக ஆண்கள் கொடுமைப்படுத்தப்படும் நிலை பிற சமூகங்களில் ஆய்வுக்கு இலக்காகாமல் கூட இருக்கலாம்.

எனவே எதிர்காலத்தில் ஆண்களின் சம உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உலகெங்கும் அவர்கள் மீதான சமூகக் குற்றமிழைப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு பெண்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் இறுக்கமாக்கப்படும் அதேவேளை பெண்களால் கொடுமைக்கு இலக்காகும் ஆண்களுக்கு நிவாரணமும் பிற ஆலோசனைகளும் உதவிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதும் காட்டாயமாகி இருக்கிறது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க