Friday, April 03, 2009

விமானங்களை விழுத்த புதிய பொறிமுறை.



மனிதன் ஆக்கும் ஒவ்வொன்றுக்கும் அவனே அழிவையும் தேடிக்கொள்வது பூமியில் ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் விமானங்களை செய்து பறக்கவிட்ட மனிதன் அவற்றை அவனின் அழிவுக்கும் பயன்படுத்த வெளிக்கிட்டு, தானே தயாரித்த விமானங்களை தானே சுட்டு வீழ்த்தவும், வெடிக்க வைக்கவும் பொறிமுறைகளை கண்டுபிடித்தான்.

அந்த வகையில் விமானங்களை சுட்டு வீழ்த்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தகர்க்க குண்டுகள் என்று பல ஆபத்தான பொருட்களையும் மனிதனே கண்டுபிடித்து தனக்குத்தானே அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறான்.

இப்போ அதிநவீனமாக மைக்குரோ அலைகளை (Micro waves) எனும் சக்திவாய்ந்த மின் காந்த அலைகளை (electro magnetic waves) பிறப்பிக்கும் சாதனங்களை உருவாக்கி அதன் மூலம் விமானத்தில் உள்ள இலத்திரனியல் சுற்றுக்களை செயலிழக்க வைத்து விமானங்களை வீழ்த்தும் பொறிமுறைகளை அமெரிக்காவும் ரஷ்சியாவும் தயாரித்து வைத்துள்ளன.

இது கொஞ்சம் பழைய சமாச்சாரம். புதிய விடயம் என்னவென்றால் இத்தொழில்நுட்ப ரகசியங்கள் இணையத்தளம் வாயிலாக கிடைக்கப் பெறுவதால் அவற்றைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும் (அவர்களும் மனிதர்களே) விமானங்களை வீழ்த்த இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்புத்தான்.

எனி வரும் காலத்தில் விமானப் பயணிகள் இலத்திரனியல் உபகரணங்களை (கையடக்கத் தொலைபேசிகள் உள்ளடங்க) கையில் எடுத்துச் செல்வதில் கூட தடை வரலாம் என்பதாகவே இவ்வறிவுப்பு கட்டியம் கூறுகிறது.

தானே ஆக்கி அவற்றைக் கொண்டு தானே தன்னை அழிக்கும் இயல்பு மனிதனை தவிர வேறேதற்கு உண்டு..??!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:00 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க