Friday, July 03, 2009

நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம்.



ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றதாகவும் மேற்படி ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தினமும் உடலுறவு கொள்வது என்பது எல்லோராலும் சாத்தியப்படக் கூடிய விடயம் இல்லை என்றும் அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக (உதாரணத்துக்கு 14 நாட்கள்) உடலுறவு கொண்டால் இயற்கையாகவே ஆணணுக்களின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி காண்பிக்கப்படும் என்பதாலும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் உடலுறவு வைத்துக் கொள்வது வளமான விந்துருவாக்கத்துக்கும் குழந்தைகள் உருவாக்கத்துக்கும் அதிக வாய்ப்பளிக்கும் எங்கின்றனர் ஆய்வாளர்கள்.

தினமும் உடலுறவு வைக்கப் பரிந்துரைப்பதிலும் குறிப்பாக பெண்களில் மாதவிடாயின் பின்னர் 12 தொடக்கம் 14ம் நாளில் முட்டை வெளியேற்றம் நிகழ்வதால் அந்த நாட்களில் தினமும் உடலுறவு வைப்பது வளமான விந்தணு முட்டையோடு சேர அதிக வாய்ப்பை அளிக்கும் என்கின்றார்கள் இவ்வாய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிற ஆய்வாளர்கள்.

பொதுவாக விந்தணுக்கள் விரைவில் பாதிப்படையக் கூடிய இயல்பைக் கொண்ட உயிரணுக்களாக விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவை அதிக உடல் வெப்பநிலையைக் கூட தாங்கக் கூடியவை அல்ல. அதுமட்டுமன்றி விந்தணுக்களை உடலுக்கு வெளியில் விந்தணு வங்கிகளில் சேமிக்கும் போது கூட அவை பிற இரசாயனக் கூறுகளால் விரைந்து பழுதடையச் செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

இந்தச் செய்தியை படித்துவிட்டு வீட்டில் ஆத்துக்காரிக்கு தொந்தரவு கொடுப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில் இந்த ஆய்வு பொதுமக்களுக்கு பரிந்துரைகளை வழங்க முன் இன்னும் பல நிலைகளூடு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது எங்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி ஒரு பெண்ணின் இயற்கையான நிலைக்கு மாறாக அவளை உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது குற்றச் செயலாகும். அதேபோல் பெண்களும் ஆண்களை கட்டாயப்படுத்துதல் தவறாகும்.


மேலதிக தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:06 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இதிலென்ன சந்தேகம்? இரைக்கிற தேணிதான் சுரக்கும் என்பது பெரியோர் கூற்றல்லவா, அதேபோல்தான் இதுவும். மேலும், அதிக உடறவு கொள்வதும் உடல் நலத்திற்கும் மிக்க ந‌ன்மையே.

Sat Jul 04, 06:20:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க