Thursday, July 23, 2009

கடத்தி (வயர் - wire) இன்றிய மின்சாரம்.



கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் விற்றிசிற்றி (Witricity) என்ற புது நாமத்தோடு அழைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செல்லிடத்தொலைபேசிகள், மடிகணணிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கடத்திகள், சார்ஜர்கள் இன்றி மின்னேற்றிப் பாவிக்க வழி கிட்ட இருக்கிறது.

அதுமட்டுமன்றி தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்னேற்றிய மின்கலங்களில் இயக்கப்படும் வாகனங்களையும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இயக்க முடியும் என்றும் தெரிகிறது.



HOW WIRELESS POWER WORKS

1. First magnetic coil (Antenna A) housed in a box and can be set in wall or ceiling
2. Antenna A, powered by mains, resonates at a specific frequency
3. Electromagnetic waves transmitted through the air
4. Second magnetic coil (Antenna B) fitted in laptop/TV etc resonates at same frequency as first coil and absorbs energy
5. Energy charges the device


Image and Citation : bbc.co.uk


காந்த அலைகள் அல்லது மின்காந்த அலைகள் மின்னைக் கடத்தக் கூடிய உலோகச் சுருள்களை (கடத்திகள்) கடந்து செல்லும் செய்து மின்னைப் பிறப்பிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே எடிசன், ரெஸ்லா போன்ற விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மையாக இருக்கின்ற போதிலும் தற்போதைய தேவைகளோடு மேற்படி கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் மூலம் கடத்திகள் மற்றும் பாவித்து விட்டு எறியும் மின்கலங்களின் பாவனையை வெகுவாகக் குறைக்கலாம் எங்கின்றார்கள் இந்த உபகரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.

இதற்கிடையே இவ்வாறு மின்காந்த அலைகளை காற்றில் செலுத்துவதால் மனிதருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை அவர்கள் இதில் பாவிப்பதைத் தவிர்க்க முனைவர் என்றும் கூறப்படுகிறது.

மேலதிக தொழில்நுட்பத் தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:03 pm

2 மறுமொழிகள்:

Blogger hamaragana விளம்பியவை...

how to receive the electricity(there may be a little power source )by t.v (cell phone has a power source.)so there may be little power source in receiveing end if itis failure???? ( iam not a sceintist village living persion) please explain. tanq.

Fri Sept 04, 02:56:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

I think they are in right path.

All electronic devices are using DC (simply say.. battery current) even though u plug them in AC (current comes from power plants.)circuit. Eeach e.device has a converter to change AC into DC.

Using this technology.. they can charge mobile phones, Laptops, battery cars which are using recharge batteries to power them up.

This is not a modern science. old science but in new application. that's it.

R u now clear..?!

Thank you

(Hint: I think u can read and write tamil. if do so.. pls write in tamil next tme. u will have better understanding. otherwise ignore it.)

Fri Sept 04, 03:16:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க