செயற்கை உயிரியை தயாரிக்கும் நிலையை மனிதன் நெருங்குகிறான்.
செயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.
ஒரு பக்ரீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை (genome) மதுவம் (yeast) எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி குறிப்பிட்ட பரம்பரை அலகுத் தொகுதியில் தேவையான மாற்றங்களைச் செய்த பின் அதனை மீண்டும் பிறிதொரு வகை பக்ரீரியாவினுள் செலுத்தி அந்த பக்ரீரியா பல்கிப் பெருகும் வகையில் தயாரித்து வெற்றி கண்ட பின் இந்தத் தகவலை உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் மனிதன் தனக்கு விரும்பிய பொருளாதார உபயோகமுள்ள பரம்பரை அலகுகளை கொண்ட பக்ரீரியா வகை அல்லது உயிர்க்கலங்களை உருவாக்கி உயிர் எரிபொருட்கள் (Biofuel) போன்ற அவசியமான உபபொருட்களை கழிவு சேதன பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை விஞ்ஞானிகள் உணரத்தான் செய்திருக்கின்றனர். அதனால் எச்சரிக்கையோடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விபரம் இங்கு.
Labels: உயிரியல், உயிரியற் தொழில்நுட்பம், செயற்கை உயிரி
3 மறுமொழிகள்:
பலநாட்களுக்குப் பின் வலையாட சந்தர்ப்பம் கிடைத்த போது புதிய செய்தி...
//ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை //
தாங்கள் கூறும் எந்த செய்தியிலும் இதைப் போன்ற ஆழ்ந்த பார்வை வெளிப்படுவது பாராட்டுக்குறியது.
நன்றிகள் & வாழ்த்துக்கள். தொடர்க.
உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ரசிகன். எப்படி நலமாக உள்ளீர்களா..??! :)
விஞ்ஞானம் (அறிவியல்).. நன்மைகளோடு தீமைகளையும் செய்யப் பயன்படுகிறதே. அப்படி இருக்கும் போது இனங்காணப்படும் தீமைகளை முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லதல்லவா..!!
thangal vinnanam pattriya thagal arumai.
nandri
SSRAJ