Thursday, May 10, 2012

கூகிளின் தானியங்கிக் கார் நம் வீதிகளில் ஓடும் காலம் அதிக தூரமில்லை.



1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது.



கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது.

கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத்தை புதிய கண்டுபிடிப்புக்களோடு.. இயற்கைக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் தொழில்நுட்பத்தில் புகுத்த விளைந்துள்ளதோடு.. மோட்டார் கார் மற்றும் இயந்திரப் பொறியியல் நோக்கி.. அதன் வியாபார யுக்திகளை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இது விடயத்தில் கூகிள் எதிர்காலத்தில் வேர்ஜினுக்கு போட்டியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:48 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு இணைப்பு | Back to Main

Wednesday, May 09, 2012

"காஸ்" விட்டே பூமியை வெப்பப்படுத்திய டைனாசார்கள்..!

 Illustration of Apatosaurus

பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில்  sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன.

இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன.


Brachiosaurus illustration

அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதேன் வாயு சும்மா வாயு அல்ல. அது ஒரு பச்சைவீட்டு வாயு ஆகும். அதாவது அது சூரியனில் இருந்து வரும் செந்நியக் கீழ் கதிர்ப்புக்களை (IR) உறிஞ்சி.. பூமியின் வளிமண்டலத்தில் மீளக் காழல் செய்யும். இதனால் பூமி வெப்பமடையும்..!

இதன்படி Mesozoic யுகக் காலத்தில் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 10 பாகை செல்சியஸால் அதிகரித்திருப்பதாக பிரித்தானிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Graphic showing animals and methane emissions

இன்றைய பூமி வெப்ப முறுதலில் பண்ணை விலங்குகளான மந்தைகள் (மாடு.. ஆடு.. பன்றி.. போன்றவை)  வெளியிடும் மிதேன் வாயுவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஏலவே நிறுவிக் காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்..!

உலகில் மனிதர்களால் வளர்க்கப்படும்.. மற்றும் இதர மந்தைகள் ஆண்டுக்கு 50 தொட்டக்கம் 100 மில்லியன் தொன் மிதேன் வாயுவை வளிமண்டலத்துள் சேர்க்கின்றன.

மனிதர்களும் சும்மா இல்லை.. அவர்களும் "காஸ்" விடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மிதேனை செயற்கை வழிகளுக்கு அப்பால் இயற்கை வழியில் வளிமண்டலத்துக்குள் சேர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:22 AM | 1மறுமொழிகள் | இந்த இடுகைக்கு இணைப்பு | Back to Main

Sunday, May 06, 2012

சுப்பர் மூன். (பெரிய சந்திரன்)

Posted Image

மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம்.

இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இருக்கக் கூடும்.

சந்திரனின் இந்த நிலை காரணமாக பாரதூரமான இயற்கை அனர்த்தங்களுக்கு இடமில்லை என்று கூறும் அறிவியலாளர்கள்..மனிதர்களுக்கோ இயற்கைக்கோ.. எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

எதுஎப்படி இருப்பினும்... வானியல் அவதானிப்பாளர்களுக்கோ.. சந்திரனை நெருங்கிய தூரத்தில் கண்டு களிக்கும் குசி மட்டும் மிஞ்சி இருக்கிறது.

  மேலும் ஆதாரங்களும்.. காணொளியும் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:07 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு இணைப்பு | Back to Main

Friday, April 27, 2012

புறாவின் மூளையில் "GPS" கண்டுபிடிப்பு.

Posted Image

அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள்.

பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.

அந்தப் புறாவும் திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.


சரி..உந்த காதல் புராணத்தை விட்டு.. இப்ப விசயத்துக்கு வருவம்..! விசயம் என்னென்னா.. எப்படி இந்தப் புறாக்கள் திசைமாறாமல் பறந்து சென்று சேர வேண்டிய இடத்தைச் சேர்கின்றன. புறாக்கள் மட்டுமல்ல.. பறவைகள் எல்லாமே எப்படி திசை மாறாமல் இலக்கு நோக்கிப் பறக்கின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதற்கு பல்வேறு கொள்கை விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில்..


Posted Image


இப்போது அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒரு விடை கிடைக்கிற மாதிரி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் புறாவின் மூளையில் 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேட தொகுதி ஒன்று.. இனங்காணப்பட்டிருப்பது. அந்த நரம்புக்கலங்கள் (GPS neurons)
பூமியின் காந்தப் புலச் செறிவுக்கு ஏற்ப தூண்டப்பட.. அந்த வழி திசையறிந்து பறக்கின்றனவாம் புறாக்கள்..!

அதெப்படி.. காந்தப்புலத்தை.. குறிப்பிட்ட கலங்கள் கண்டறிகின்றன என்ற விடயம் இன்னும் பூரணமாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும்... இவ்வளவையும் கண்டறிந்த ஆய்வாளர்கள் அதைச் செய்யாமலா இருப்பார்கள். எனவே புறாக் கூட அதன் மூளையில் உள்ள.. இயற்கையான GPS ஐ வைச்சுத்தான் திசை அறிந்து பறக்கிறது என்ற உண்மை உறுதியாக வெளிவர அதிக நாள் எடுக்காது என்று நம்பலாம்.


இது இன்னொரு விசயத்தையும் விளங்கிக் கொள்ள உதவும். குறிப்பாக செறிவான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில்.. வாழ்ந்து வந்த பறவையினங்கள் பல அருகி விட்டுள்ளதுடன் இன்னும் சில இடம்பெயர்ந்தும் சென்றுவிட்டன. பறவைகளின் இந்த நடவடிக்கைக்கும்.. இதன் மூலம் சரியான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது..!


Magnetic fields light up 'GPS neurons', scientists say


வெளி இணைப்பு- நன்றி BBC

தொகுப்பு: யாழில் நெடுக்ஸ்

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:40 PM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு இணைப்பு | Back to Main