Saturday, May 13, 2023

சீரியல்கள் மூலம் அறிவியல் சார் சமூகத்தை உருவாக்கலாமே.

மருத்துவ ரீதியில் பிறப்புரிமைசார் குறைப்பாடுகளோடு குழந்தை ஒன்று உருவாகி இருந்தால்.. பெற்றோருக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்படும்.

ஒன்று தொடர்ந்து குழந்தையை தங்க வைத்து பெற்றெடுத்து வளர்ப்பது. அதில் உள்ள சிக்கல்கள் விளங்கப்படுத்தப்படும்.

இரண்டு.. பெற்றோர் முழுமையாக விரும்பும் பட்சத்தில் கருக்கலைப்புச் செய்ய சொல்லப்படும். அதுவும் குறித்த காலத்துள் தான் இது சாத்தியம்.

ஆனால் ஒருபோதும் பெற்றோர் விருப்புக்கு இணங்க பிறந்த குழந்தையை அது குறைபாடோடு தான் பிறக்கும் என்று தெரிந்திருந்தும் பெற்ற பிள்ளையை கருணைக்கொலைக்கு பரிந்துரைப்பதில்லை.

கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கும் போதே பல பெற்றோர் குறிப்பாக குழந்தையை சுமக்கும் பெண்கள்.. மிகவும் துயரோடும் மன அழுத்தத்தோடும் காணப்படுவதோடு.. தற்கொலை உணர்வுக்கும் தூண்டப்படக் கூடும்.. அல்லது அழுது தமது வேதனையை வெளிப்படுத்துவதை கண்டு மனம் நொந்திருக்கிற சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இது எல்லாம் நாட்டிலும் உள்ள ஒரு பொதுப்பிரச்சனை.

தமிழகம் உட்பட இந்தியாவில்  சும்மா சீரியல்களை எடுத்து சமூகத்துக்கு உதவாத விடயங்களை நாட்கணக்காகக் காட்டுவதைக் காட்டிலும் சீரியல்களை சமூக மற்றும் அறிவியல் அறிவூட்டப் பயன்படுத்துவது கூடிய சமூக விழிப்புணர்வுக்கும் அறிவூட்டலுக்கும் வாய்ப்பளிக்கும். 

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:27 pm | மறுமொழிகள் | Back to Main

Saturday, April 15, 2023

நனோடெக்னாலஜி பிசாசாகுமா.. வரப்பிரசாதமாகுமா..?!


நனோடெக்னாலஜி ஹிந்தியாவில் இப்போது தான் கவர்ச்சிகரமான தலைப்பாகியுள்ளது. மேற்கு நாடுகளில் இது 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இந்த தொழில்நுட்பம் பல இடங்களில் பாவிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் சிக்கல் என்ன என்றால்.. பொலித்தீன்.. பிளாஸ்ரிக்.. மைக்குரோபீட்ஸ் (microbeads).. இவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு எப்படி கவர்ச்சிகரமாக அறிமுகமாகி பின் பாவனைக்கு வந்து இப்போ அவற்றின் பாதக விளைவுகளால்.. அவை பாவனைக்கு தடைசெய்யப்படும் நிலைக்கு வந்திருக்கோ.. அந்த நிலை நனோவுக்கும் வரும்.

ஏனெனில்.. இந்த நனோ துகள்கள் காற்றில் கலந்து அல்லது வேறு வகையில் உடலை அடைந்தால்.. அவற்றின் நீண்ட காலப் பாதிப்பு என்பது பாதகமானதாக இருக்கும்..!

 ஏலவே ஈயத்துகள்களின்.. இரும்புத் துகள்களின் தாக்கம் பல நோய்களுக்கான காரணியாக அமைந்திருப்பது போல்.. இந்த காபன் சார்ந்த நுண் துணிக்கைகளின் பாதிப்பும் போகப் போகத்தான் தெரியும்.

கண்டுபிடிப்பதும் கவர்ச்சியாக்கி பாவிப்பதும் பிரச்சனையல்ல.. ஆனால்.. அவற்றின் பாதகமான விளைவுகளை முன்கூட்டியே அறிவதும்.. அறிவிப்பதும் தான் உண்மையான சமூக அக்கறையுள்ள.. சூழல் பாதுகாப்புக் கருதும்.. அறிவியலாக இருக்க முடியும். 

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:45 pm | மறுமொழிகள் | Back to Main

Tuesday, October 11, 2022

மொத்துகை மூலம் விண்கல்லின் பாதையை மாற்றிய நாசா.

அமெரிக்க விண்ணாய்வு நிறுவனமான நாசா கடந்த செப்டம்பர் மாதம் 2022 இல் DART என்ற சிறிய விண்கலம் மூலம் பூமியில் இருந்து 11 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சுழன்று கொண்டிருக்கும் 163 மீட்டர்கள் விட்டமுள்ள Dimorphos என்று அழைக்கப்படும் விண்கல்லில் மோதி அதன் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த மொத்துகையின் பின்னர் ஒரு சிறிய வால்நட்சத்திரம் போன்று விண்தூசிகள் 10,000 கிலோமீட்டர்கள் வரை நீண்டதுவும் படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பூமி நோக்கி வரக் கூடிய விண்கற்களின் திசையை மாற்றுவதற்கு இந்த மொத்துகை (மோதல்) பரீட்சிப்பு உதவும் என்று நம்பலாம்.
மேலும் செய்திகளுக்கு..

பதிந்தது <-குருவிகள்-> at 9:35 pm | மறுமொழிகள் | Back to Main

Sunday, March 07, 2021

செப்சிஸும் அம்மாவின் இழப்பும்

உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது..

செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது.

செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். 

குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்)

நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்..

நாட்பட்ட நோய் கண்டவர்கள்..

தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்..

நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்..

நீரிழிவு நோய் கண்டவர்கள்..

தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்..

உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்..

விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்..

போதிய உணவின்மை..

போதிய ஊட்டச்சத்தின்மை..

வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை..

போதிய சுகாதார வசதிகள் இன்மை..

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்..

போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை..

இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. 

 

செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன..

1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும்

2. உடற்சோர்வு

3.சிறுநீர் உற்பத்தி குறைவு

4.மயக்க நிலை

5. அதிகரித்த இதயத்துடிப்பு

6. வாந்தி மற்றும் பேதி

7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல்

8. குறை குருதி அழுத்தம்

சுவாசத்தொற்று எனில்

சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்..

Sepsis | El Camino Health

 

அம்மாவின் விடயத்தில்..  அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன.

அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??!

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை.

சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை.

செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock)  என்பது..

குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன.

குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது.

அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும்  Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை.

அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும்  Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும்.

அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை.

உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்..  இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம்.

தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். 

உசாத்துணை:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/

பதிந்தது <-குருவிகள்-> at 12:30 pm | மறுமொழிகள் | Back to Main