Saturday, June 01, 2019

மலேரியா நுளம்புகளை கொல்லும் பங்கசு


Mosquito

மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம்.. மலேரியா நோயை உருவாக்கும் நுண் உயிரிகளைக் காவும் நுளம்புகளை அழிக்கவல்ல பங்கசு உருவாக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறியத்தந்திருக்கிறார்கள்.

இந்தப் பங்கசு உருவாக்கும் நச்சுச் சுரப்பே இப்படி நுளம்புகளைக் கொல்கிறதாம். இந்தப் பங்கசு.. ஒரு வகை நச்சு வலையை உருவாக்கும் சிலத்தி ஒன்றின் மரபணு புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

மலேரியா நோய் என்பது இப்போதும் மனிதர்களிடத்தில் கணிசமான அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. இதனை விளைவிக்கும் நுண் உயிரி நுளம்புகள் மூலம் மனிதருக்கு மனிதர் காவப்படுகிறது.

இந்தப் பங்கசு உருவாக்கும் நச்சு 99 சதவீதம் மலேரியாவை காவும் நுளம்புகளைக் கொல்லுமாம். குறிப்பாக பெண் நுளம்புகளை.

மேலதிக தகவல் இங்கு..

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க