Tuesday, October 11, 2022

மொத்துகை மூலம் விண்கல்லின் பாதையை மாற்றிய நாசா.

அமெரிக்க விண்ணாய்வு நிறுவனமான நாசா கடந்த செப்டம்பர் மாதம் 2022 இல் DART என்ற சிறிய விண்கலம் மூலம் பூமியில் இருந்து 11 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சுழன்று கொண்டிருக்கும் 163 மீட்டர்கள் விட்டமுள்ள Dimorphos என்று அழைக்கப்படும் விண்கல்லில் மோதி அதன் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த மொத்துகையின் பின்னர் ஒரு சிறிய வால்நட்சத்திரம் போன்று விண்தூசிகள் 10,000 கிலோமீட்டர்கள் வரை நீண்டதுவும் படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பூமி நோக்கி வரக் கூடிய விண்கற்களின் திசையை மாற்றுவதற்கு இந்த மொத்துகை (மோதல்) பரீட்சிப்பு உதவும் என்று நம்பலாம்.
மேலும் செய்திகளுக்கு..

பதிந்தது <-குருவிகள்-> at 9:35 pm | மறுமொழிகள் | Back to Main

Sunday, March 07, 2021

செப்சிஸும் அம்மாவின் இழப்பும்

உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது..

செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது.

செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். 

குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்)

நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்..

நாட்பட்ட நோய் கண்டவர்கள்..

தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்..

நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்..

நீரிழிவு நோய் கண்டவர்கள்..

தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்..

உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்..

விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்..

போதிய உணவின்மை..

போதிய ஊட்டச்சத்தின்மை..

வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை..

போதிய சுகாதார வசதிகள் இன்மை..

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்..

போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை..

இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. 

 

செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன..

1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும்

2. உடற்சோர்வு

3.சிறுநீர் உற்பத்தி குறைவு

4.மயக்க நிலை

5. அதிகரித்த இதயத்துடிப்பு

6. வாந்தி மற்றும் பேதி

7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல்

8. குறை குருதி அழுத்தம்

சுவாசத்தொற்று எனில்

சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்..

Sepsis | El Camino Health

 

அம்மாவின் விடயத்தில்..  அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன.

அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??!

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை.

சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை.

செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock)  என்பது..

குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன.

குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது.

அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும்  Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை.

அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும்  Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும்.

அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை.

உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்..  இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம்.

தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். 

உசாத்துணை:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/

பதிந்தது <-குருவிகள்-> at 12:30 pm | மறுமொழிகள் | Back to Main

Friday, January 01, 2021

கொவிட் 19 முள்ளுப் பந்து விளையாட்டு - களம் 2

இங்கு கொவிட்-19 தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் பீதிகளைப் பார்ப்போம். அவற்றில் பல போலியானவை.

கேள்வி பதில் வடிவில்..

1. பி சி ஆர் பரிசோதனை நோகுமா?

நிச்சயமாக நோகக் கூடிய ஒரு பரிசோதனை அல்ல. swab (சுவப்) எடுக்கும் போது..கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு வாயை.. ஆ ஆ என்று திறந்து அடித்தொண்டையில்.. இருந்து மாதிரியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல்.. மூக்குத்துவாரத்தில்.. இருந்து என்றால்.. சுவப்பை... அடிவரைக்கும் செலுத்தி மாதிரி எடுக்கனும் என்றில்லை. சுமார் 1.5 சென்ரிமீட்டர்கள் வரை உள்ளே சென்று மூக்குத்துவார சுவரில் உள்ள மாதிரிகளை எடுத்தாலே போதும். இது ஒரு போதும் நோகாது. சிலருக்கு தும்மல் வரலாம். நீங்கள் ஒரு திசுவை வைத்து தும்மலை பிடித்துக் கொண்டு மாதிரிகளை எடுக்கலாம்.

COVID-19 nasal swab test: What it feels like to have one - Chicago Sun-Times

Explained: how five-year-olds should be tested for coronavirus | World news  | The Guardian

ஏலவே சளி உள்ளவர்கள்.. சளியை 'சீறி' திசுவில் எடுத்துவிட்டு மாதிரியை எடுக்க வேண்டும்.

எப்போதும் தும்பல்.. இருமல்.. மற்றும் சளியை பெற்ற திசுக்களை (soft nasal tissue).. இப்படி கிருமி தொற்றழிப்புச் செய்து கொள்வது நல்லம். சாதாரண வாழ்வில் இதனை இயல்பாகக் கடைப்பிடிப்பது தடிமன் (common cold).. மற்றும் புளூ (flu) போன்ற நோய்கள் வருவதைக் கூடக் குறைக்கலாம். குறிப்பாக சிங்கப்பூரில் இந்த நடைமுறை இயல்பில் உண்டு. 

Catch It, Bin It, Kill It Sign

2. கொவிட்-19 தொற்றின் போது சில நோயாளிகளில் அதிக அளவு சளி வெளியேற்றப்பட்டு அது சுவாசப்பைகளில் தடங்கலை ஏற்படுத்தும் போது சுவாசிக்க கஸ்டமாக இருக்கும். இதன் போது என்ன செய்ய வேண்டும்..?!

இதன் போது நீங்கள் தற்காலிக முதலுதவிச் செயற்பாடாக.. ஆவி அடையக் கூடிய சுடுநீரில்.. சிறிதளவு விக்ஸை ( கலந்து.. அந்த ஆவியை உள்ளிளுத்துக் கொள்ளலாம். தமிழில் ஆவி பிடிப்பது என்பார். 

image.jpeg.341d33da9a352d50b57df30d54c8b8d0.jpeg

இதில் மக்கள் தமது வசதிக்கு ஏற்ப முறைகளைக் கையாள்கின்றனர். சிலர் சுடும் நீரில் தேயிலை மற்றும் அக்ஸ் திரவம் சில துளிகள் கலந்தும் பிடிப்பது சுகம் எங்கின்றனர்.

images?q=tbn:ANd9GcSCpW0h8qdiNAsIiN-5UQTufIX_Bk78EokxzVILWYKaDZ0pD-_PM7QPRaQLG9z149DfcAcQnNQF&usqp=CAc

இன்னும் சிலர் கற்பூரத்தையும்.. தேங்காய் எண்ணையையும் மேசைக்கரண்டியில் எடுத்து.. சூடாக்கி.. அந்த ஆவியை சுவாசிப்பது.. மற்றும் நெஞ்சில் பூசிக் கொள்வது தமக்கு சுலபமாக இருக்கு என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இவை எவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை முறைகள் அல்ல. அங்கீகரிக்கப்பட்ட முதலுதவிகளும் அல்ல. அதனால்.. இவற்றால் பாதிப்பு அதிகமானால்.. அதற்கும் நோயாளிகளே அதிகம் சிரமப்பட நேரிடும். எனவே இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய முன்.. உங்கள் பொது வைத்திய சேவைக்குரிய மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது மிக மிக நல்லது. 

How to apply Vicks VapoRub: all of the ways you mightn't have considered.

இந்த முதலுதவிக்கு.. பயன் கிடைக்காவிடின்.. உடனடியாக மருத்துவ சேவையின் அவசர சேவை.. தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உதவி கோருவது மிக முக்கியம். காரணம்.. இந்த மூச்சு விடும் சிரம நிலை தொடர்ந்து தீவிரமானால்.. உடலில் ஒக்சிசன் அளவில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அது பிற அங்கங்களின் செயற்பாட்டை பாதிக்கச் செய்து.. பலத்த கேடினை விளைவிக்கும்.

3. எனக்கு மூச்சு விடக் கடினமாக உள்ளது. நெஞ்சில்.. சளி நிறைந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் வைத்தியசாலைக்குப் போகப் பயமாக உள்ளது.. பெரிய வயர்களை மூக்குக்குள்ளால் தள்ளினமாம். ஆக்கள் சொல்வதைக் கேட்டால்.. மிகவும் பயமாக இருக்குது. என்ன செய்வது..?!

கொவிட் 19 தொற்று தீவிரமடையும் போது உடலும் அதனை எதிர்த்துப் போராடும். அதன் விளைவுகளில் ஒன்று சளி உருவாதல். சிலருக்கு இது அதிக அளவாக அமைந்து விடுவதோடு.. அது சுவாசப் பைகளை அடைந்து கொள்வதாலும்.. சுவாசப் பாதைகளை சூழ்ந்து கொள்வதாலும்.. மூச்சு விடச் சிரமம் ஏற்படுவதோடு.. குருதியில் ஒக்சிசனின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. 

எனவே மூச்சுவிடச் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவைகளின் தொலைபேசி எண் ஊடாக.. மருத்துவ உதவி கோருவது அவசியம்.

மருத்துவ மனையில்.. சோதனையின் பின் தேவைக்கு அவசியமான முறையில்.. உங்களுக்கு உடலுக்கு தேவையான ஒக்சிசனை வழங்க உபகரணங்களை உபயோகிப்பார்கள்.

அவை எல்லாமே ஒரு விதமானவை அல்ல. சில மட்டுமே அதிதீவிர நோயாளிகளுக்குரிய வயர்களை மூக்குத்துவாரத்தூடு செலுத்தும் பொறிமுறைகளைக் கொண்டவை. ஆனால்.. மற்றவை நோகாத.. இலகுவான உபகரணங்கள். எனவே அச்சம் தவிர்த்து.. மூச்சுவிடுவதில் சிரமம் என்றால்.. உடனடியாக அவசர சேவை தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அம்புலன்ஸ் வண்டிகளை அழைத்து.. மருத்துவமனையை அடைதல் மிக மிக நல்லது.

How is coronavirus disease treated in hospital?

உங்களின் உடல் நிலைக்கு ஏற்ப இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தேவையான அளவு ஒக்சிசன் செலுத்தப்படும்.

இதில்.. படி 1 மற்றும் 2 நோவோ.. சிரமமோ அற்றது. இது மூச்சு விடும் சிரமம்.. தீவிரமாக முதலே... மூச்சுவிட கடினம் என்ற அறிகுறி தென்பட்டதும்.. மருத்துவமனையை அடைவதின் ஊடாக நீங்கள் உங்களை சிரமப்படுத்தல் இன்றி சிகிச்சைக்கு உப்படுத்திக் கொள்ளலாம். 

படி 3 , 4, 5 கூடிய சிக்கல் தன்மையின் படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசைப்படுத்தலை மேலே படத்தில் இடமிருந்து வலம் காணலாம்.

படி 3 ஐ விட படி 4 ம் 5 சிக்கல் தன்மை கூடியவை. 

4. கொவிட்-19 வெளிப்புறத் தொற்றகற்றலை.. பேபி வைப் (baby wipes)பை பயன்படுத்தி செய்யலாமா.. உபயோகமா..?!

பதில் இல்லை என்பதுதான்.

பேபி வைப்புக்கு பதிலாக.. அற்ககோல் வைப் பாவிப்பதே சிறந்தது. ஆனால்.. இதனை உடலின் வெளிமேற்பரப்பை/உடலை தூய்மைப்படுத்த பயன்படுத்தக் கூடாது. கைகளை சோப் திரவம் பாவித்து கழுவும் விதிமுறைகளைப் பின்பற்றி கழுவ வேண்டு.. அல்லது hand sanitizer (கைகாப்புத் திரவம்) பாவிப்பது நல்லம். உடலை body wash கொண்டு கழுவுதல் சிறப்பு. 

CHW98002 Antibacterial Alcohol Disinfection Wipes Pack of 70 | Medisanitize

 

5. சில வகை மவுத் வாஸ் (வாய்கழுவித் திரவம்)/ பற்பசை பாவிப்பது கொவிட்-19 தொற்றைக் குறைக்குமா..?!

இது தொடர்பில் சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஆம்.. சில வகை மவுத் வாஸ் பாவித்து கொப்பளித்து.. அடிக்கடி வாய் கழுவிக் கொள்வது.. / பற்பசை பாவித்து நாளுக்கு இரண்டு தடவைகள் பல் விளக்கிக் கொள்வது.. கொவிட்-19 தொற்றின் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்.. இது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவோ.. அல்லது பரிந்துரைக்கப்படவோ இல்லை.

images?q=tbn:ANd9GcTAdB1UMPaB3QEAzfvaj7qCGGjo-5zTdduck7cNbLp_mg4uVI8cIUwZo7-_HLvsbtgjfu054A8&usqp=CAcimages?q=tbn:ANd9GcRxGZQTriv3kC5ELhtUmeWm9fuOS_2xM2mrvSjFC_v9PkpEiMdgOqPZ7YeOx8804ECCY-O7NQ&usqp=CAc

Covid: Mouthwash 'can kill virus in lab in 30 seconds'

ஆக்கம்: யாழ் இணையம் 

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:24 pm | மறுமொழிகள் | Back to Main

Friday, December 25, 2020

கொவிட் 19 முள்ளுப் பந்து விளையாட்டு

கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு.

Life cycle of a coronavirus: How respiratory illnesses harm the body |  COVID | Prevention | UT Southwestern Medical Center

தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை..

முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்...

கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்..  extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல்.

இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... 

இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்..

Technology - AusDiagnostics Pty Ltd

அதன் பின்... பிரித்தெடுத்த கொவிட் ஆர் என் ஏ ( RNA) ஐ.. வைச்சுக் கொண்டு வாய்தான் பார்க்கனும்.. ஏனெனில் ஆர் என் ஏயை அப்படியே பெருக்கி எடுக்க இன்னும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.. இங்கும் இயற்கை மனிதனை வென்றுவிடுகிறது.. அதனால்.. கில்லாடி மனிதன்.. என்ன செய்கிறான் என்றால்.. ஆர் என் ஏ யை டி என் ஏ.. கொம்பிலிமென்ரரி (Complementary DNA)  cDNA ஆக்கி இந்த கொவிட் 19 இன் மரபணுத்தகவல்கள் கொப்பிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொள்கிறான். இந்த ஆர் என் ஏ அல்லது சி டி என் ஏ யோ தொற்றாது. 

கொவிட் கொழுக்கட்டையாக இருந்தால் மட்டுமே தொற்றும். அதனை கோது.. உள்ளீடு என்று பிரித்துவிட்டால்.. ஆள் காலி. இதனையே மேலே உள்ள ரோபோ செய்கிறது.

இதன் பின் பிரித்தெடுத்த ஆர் என் ஏயை பயன்படுத்தி.. மேற்சொன்ன சி டி என் ஏ யை உருவாக்கி.. கொப்பி பண்ணி அதில் உள்ள கொவிட் தனித்துவ ஜீன்களை அடையாளம் கண்டு.. கொவிட் தொற்றை அடையாளம் காண வேண்டும். 

இந்த வேலைகளையும் ஒரு ரோபோவே செய்யும்..

AusDiagnostics Systems and Reagents - YouTube

அவர் இவர் தான். இவர் தன் தொழிலை ஆட்டம் 1 மற்றும் ஆட்டம் 2 என்று ஆடி முடிப்பார். இதற்கான மொத்த நேரம் 2 மணித்தியாலங்கள்.

இவருக்குள் பல அயிட்டங்கள் வைக்கப்பட்டால் தான் அவர் இந்த வேலையை செய்வார்.. இவரை கணனி கட்டுப்படுத்தும்.. இவருக்குள் இத்தனை அயிட்டங்களை அடக்கனும். இல்லாவிடில் இவருக்குரிய வேலையை இவர் செய்யமாட்டார்.

இதற்குள்.. ஆர் என் ஏ யை சி டி என் ஏ ஆக்கி பல்கிப் பெருகச் செய்யும் அதன் பின்.. பல்கிப் பெருகின சி டி என் ஏ யில்.. கொவிட் 19 ஐ அடையாளம் காட்டக் கூடிய அதற்கு என்றே தனித்துமான அடையாள அறிகுறிகளை கண்டறியச் செய்யச் செய்வது. அதாவது தனித்துவமான மரபணுக்களை (Genes) தெரிவு செய்து அடையாளம் காட்டுதல். கொவிட்டை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான.. தனித்துவமான மரபணுக்கள் பாவிக்கப்படுகின்றன.

Software - AusDiagnostics Pty Ltd

கொவிட்-19 தெரிவு மரபணுக்களின் தொகையை இந்த வரைபுகள் மூலமாக நமக்கு கணனிகள் கணித்துக் காட்டும். இதில் குறித்த கொவிட் 19 ஜீன் வரைபுகளில்  Ct (Cycle Threshold value) அளவீடு..9 தொடங்கி 30 க்குள் அமையின் அதனை கொவிட் 19 தொற்று பாசிட்டிவ் என்று கொள்வார்கள். குறிப்பாக Ct குறைவாக இருப்பின் தொற்று அதிகம்.. கூடியதாக இருப்பின் தொற்றுக் குறைந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்தப்படும். தொற்றின் மிக ஆரம்பத்திலும் Ct கூடியதாக இருக்கலாம். அதலால் இதனை வாசிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். 

ஆக இந்த பி சி ஆர் (இங்கு உண்மையில் பாவிக்கப்படுவது.. rRT-PCR (The COVID-19 RT-PCR test is a real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR)) ஆகும். மேற்சொன்ன முறையில் இதனைச் செய்து முடிக்க.. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் எடுக்கும். இதனை விட குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய வழிமுறைகளும் உண்டு. ஆனால்.. இந்த முறையில்.. சென்சிர்ரிவிற்றி -sensitivity அதிகமாகும்.

எனி மாறல்கள் தொடர்பில் பார்ப்போம்.. 

என்னதான் மாறல் (variant).. தோற்றம் மாறிய கொவிட் என்று உலகம் உங்களை வெருட்டினாலும்.. அதன் சில ஜீன்கள் அப்படியே தனித்துவமாகவே தான் உள்ளன. இந்த மாறல்கள்..கொவிட் 19 இல் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்.. ஒட்டும் கிளைகோபுரதத்தில் (Glycoprotein -Spike) தான் மாறல் வருகிறது. அதன் ஒட்டும் தன்மையில் தான் தொற்றும் தன்மை உள்ளது. 

Anatomy of a killer - Understanding SARS-CoV-2 and the drugs that might  lessen its power | Briefing | The Economist

 

Coronaviridae ~ ViralZone page

கொவிட் 19 வெறும் 30 ஆயிரம் bp (base pairs)தான்.. 30 ஆயிரம் மரபணு அலகுகள் என்று வைச்சுக் கொண்டால்.. இது ஆட்டிப்படைக்கும் மனிதனில் இதே 6.4 பில்லியன் bp கள்.

கொவிட் - 19 எமது உடலுக்குள் போடும் ஆட்டத்தை விளங்கிக் கொண்டாலே.. போதும்.. இவரை மடக்கிற பல வழிகளை கண்டறியலாம்.

Figure 1 by Vagmita Pabuwal and Keith Monaghan

 

எல்லா வைரஸ் போலவும் கொவிட் டும் கொட்டிக்காரன் அல்ல அல்ல சுழியன். எமது உடலுக்குள் நுழைந்து எமது கலங்களில் உள்ள இரசாயனப் பொறிகளை பயன்படுத்தி தன் இனத்தைப் பெருப்பித்துக் கொள்கிற.. திறமை உள்ள சுழியன்.

சரி.. எனி எப்படி கொவிட் இருக்கா இல்லையா என்று சொல்லுறது..

கொவிட் எல்லா கலங்களிலும் தொற்ற முடியாது. அவரின் ஒட்டுந்தன்மையுள்ள முள்ளுத்தொப்பியில் உள்ள முள்ளு ஒட்டக்கூடிய கலங்களை தான் அவர் ஆரம்பித்தில் தாக்குவார். அது எமது சுவாசப்பாதை வழி மென்மையான இழையங்கள்.. அமைந்திருப்பது அவருக்கு இந்தச் செயலைச் செய்ய இலகுவாகிவிட்டது.

எனவே சுவாசப் பாதையில்.. குறிப்பாக உள் மூக்குத்துவாரங்கள்.. அடித்தொண்டைப் பகுதியில் இருந்து பெறப்படும்.. பரிசோதனை மாதிரிகள் அடங்கிய காதுக்குடம்பி போன்ற ஆனால் இதற்கு என்று தயாரித்த மென் குடம்பிகளை (swab) பயன்படுத்தி செய்வார்கள்.

Rapid COVID-19 Lateral Flow Test Kits (Pack of 10 Tests) – New Leaf Health

மேலே படத்தில் இருப்பது துரித பரிசோதனை (Rapid test kit or Lateral flow test kit) தொகுதி. இதனை வீட்டிலேயே செய்யலாம். இதில் கொவிட் அன்ரிஜென் (Antigen) இருக்கா என்று அதாவது கொவிட் தொற்றி இருக்கா என்று கண்டுபிடிக்கலாம். இதனை வெறும் 30 நிமிடத்துக்குள் செய்யலாம். ஆனால்.. உண்மையில் 10 நிமிடத்துக்குள் முடிவை சொல்லலாம்.

Coronavirus (COVID-19) IgM/IgG Rapid Test Kit

இதற்கு மேலதிகமாக..

COVID-19 Test Kit Solution - NFC Forum

அன்ரிபாடி.. (antibody test) ரெஸ்ட் செய்வது. அதாவது எமது உடலில் கொவிட் -19 க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கான்னு கண்டறிதல். இதற்கு சில துளி இரத்த மாதிரிகள் போதும். 

COVID-19 IgM/IgG Antibody Test Kit (Colloidal Gold) – Antagen  Pharmaceuticals, Inc.

இறுதியாக..

என்னதான் கொவிட் 19 தோடு விளையாடினாலும்.. பாதுக்காப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு போர்க்களச் சண்டைக்கு போவது போல் தான் போக வேண்டி இருக்குது. காரணம்.. கொவிட் நேரடியாக விளைவிக்கும் பாதிப்பை விட எமது உடல் கொவிட்டுக்கு எதிராக அபரிமிதமாக தொழிற்பட ஆரம்பித்தால் தான்.. எமது உடல் எம்மையே அதிகம் பாதிக்கச் செய்துவிடும். அதனால்.. கொவிட்19 தொற்றுக்கண்டால்.. அச்சம் தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தி/ நிர்பீடணச் செயற்பாட்டை அதிகரிக்கவல்ல.. உணவுகளை உட்கொள்வதோடு.. தொண்டை.. நாசிப் பகுதியில் இருக்கும் கிருமிகளை கொல்லக் கூடிய அல்லது வெளியேற்றக் கூடிய.. உணவுகளை.. சிகிச்சை முறைகளை முன்னெடுக்கலாம்.

சுவாச அல்லது நாட்பட்ட நீண்ட கால நோயாளிகள்.. நிர்பீடணம் அல்லது நோய் எதிர்ப்புசக்தி.. பலவீனமானவர்கள்.. கொவிட் 19 எதிரான அவர்களின் உடற்தொழிற்பாடு காரணமாக.. பாதிப்பை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள்.. தேவை உணர்ந்து வைத்திய சேவைகளிடம் உதவி நாட வேண்டும்.

சரி..

எனி தனிமைப்படுத்தல்... முகக்கவசம் அணிதல்.. கைகழுவுதல்.. தனிமனித இடவெளி.. இதெல்லாம்.. தொற்றுக்கான வாய்ப்பை.. குறைக்கும் வழிமுறைகளே தவிர.. இவை தொற்றுக்களை முற்றாக தடுக்காது. 

எனி வக்சீனுக்கு (vaccine) வருவோம்..

பெறப்பட்டுள்ள வக்சீன்கள்.. இந்த வைரசின்.. சில ஆர் என் ஏ பகுதிகளை பயன்படுத்தி.. அதனை பிரதிநிதித்துவப்படுத்தும்.. கூறுகளை உருவாக்கி.. பெறப்பட்டதே இந்த வக்சீன்.

ஆனால் வேறு சில வழிமுறைகளிலும் இந்த வக்சீன்கள் பெறப்படலாம்.

What to know about COVID-19 vaccines and how they work - ABC News

இந்த வக்சீனை செலுத்தினால்.. உங்கள் உடல் இந்த வைரசுக்கு எதிரான அன்ரிபாடிகளை உருவாக்கி வைச்சுக் கொள்ளும். ஒருவேளை உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்.. உடனடியாகவே இந்த அன்ரிபாடிகள் தொழிற்பட ஆரம்பிப்பதால்.. இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து பெருகிக் கொள்ள முதலே அழிக்கப்பட்டு விடும். அதனால்.. இதன் தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வக்சீன்களை எடுப்பதால்.. பின்விளைவுகள் வருமா என்றால்.. பாரிய பின்விளைவுகள் வர வாய்ப்புக்குறைவு. ஆனால்.. தனிப்பட்ட நபர்களின் உடல்நிலைகு ஏற்ப இதனை தெரிவு செய்வது நல்லம். குறிப்பாக சிலருக்கு.. பென்சிலின் அலேர்ஜி (Allergy)/ ஒவ்வாமை இருந்தால்.. எப்படி பென்சிலின் எடுக்க முதல் பரிசோதித்து எடுக்கச் சொல்வார்களோ அப்படி. 

இந்த வக்சீன்கள் எமக்கு புதிதல்ல. நாம் பிறந்த காலத்தில் இருந்து பல வக்சீன்கள் எமக்குள் ஊட்டப்பட்டே உள்ளன. சில வக்சீன்கள்.. உடலில் மாறா வடுக்களை ஏற்படுத்தி இருப்பதையும் பார்ப்பீர்கள். அந்தளவுக்கு இது இல்லை. 

மேலும்.. குருதிப் பிளாஸ்மா (Blood Plasma) ஏற்றுதல்.. கொவிட் 19 தொற்றுக்கண்டு.. தேறிய 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களின் குருதியில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகள்.. கொவிட்டை எதிர்த்துப் போராடக் கூடிய அன்ரிபாடிகளை கொடுப்பதுண்டு. ஏலவே இப்படியான வழிமுறைகள் வேறு சில நோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவதுண்டு. 

சரி.. இத்தோடு.. கொவிட்-19 முள்ளுப்பந்து விளையாடி முடிந்துவிட்டது.

இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ. 

படங்கள் - இணையம்

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:06 pm | மறுமொழிகள் | Back to Main