தற்கொலைக்கும் மரபணு சார்ந்த இரசாயனத் தொழிற்பாட்டுக்கும் தொடர்பு.
தற்கொலை செய்பவர்களின் மூளையில் மெதைலேசன் (methylation) என்ற செயற்பாடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நடத்தையை கட்டுப்படுத்தும் இரசாயன தகவல் வாங்கிகளின் தொழிற்பாடு மூளையில் சீர்குலைவதால் அல்லது தடுக்கப்படுவதால் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர் என்று கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மெதைலேசன் என்பது தேவையற்ற மரபணுக்கள் அவற்றின் இயல்பை வெளிக்காட்டுவதைத் தடுக்க இயற்கையாக உடலால் பிரயோகிக்கப்படும் ஒரு இரசாயனச் செயன்முறையாகும்.
மேலதிக தகவல் இங்கு.
மெதைலேசன் பற்றிய மேலதிக விளக்கம் இங்கு.
Labels: மருத்துவ அறிவியல், மூளை, மூளை இரசாயனம், மூளை மருத்துவம்
0 மறுமொழிகள்: