Friday, December 09, 2011

40% க்கு மேலான புற்றுநோய் தோன்ற காரணம் எமது உணவு வழக்கங்களே..!

அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இருந்து ஆண் பெண் இருபாலாரிடமும்.. அதிக புற்றுநோய் தோன்றக் காரணம் உணவு வழக்கங்களே என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களில் அநேகருக்கு.. புகை.. மதுபானம்.. சமைக்காத காய்கறிகளை.. பழங்களை உண்ணாமை இப்படியானவை இதற்கு முக்கியமான காரணியாக.. அமைய..

பெண்களிலோ.. உடற் பருமன்.. புகை.. மதுபானம்.. இதர நுண்கிருமித் தொற்றுக்கள் என்பவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

எமது அன்றாட உணவு வழக்கத்தை சீர்செய்வதன் மூலமும்.. இவ்வாய்வு பரிந்துரைக்கும் வழியிலும்.. நாம் வாழப் பழகிக் கொண்டால்.. புற்றுநோய்க்கான வாய்ப்பை நாம் வெகுவாகக் குறைக்க முடியும்..!

மேலும் இங்குள்ள காணொளியை பாருங்கள்.. விடயங்களை அறிந்து உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் சொல்லுங்கள்.

புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோயாகும்..! வருமுன் காப்பதன் மூலம்.. இந்த நோயில் இருந்தும் தப்பி வாழ முடியும்.

மேலதிக இணைப்பு

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:43 pm

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

மிகவும் பயனுள்ள தகவல்கள்
/ஆண்களில் அநேகருக்கு.. புகை.. மதுபானம்.. சமைக்காத காய்கறிகளை.. பழங்களை உண்ணாமை இப்படியானவை இதற்கு முக்கியமான காரணியாக.. அமைய../

சமைக்காத காய்கறிகள் என்று எவற்றை குறிப்பிடுகிறிர்கள்?

Fri Dec 09, 10:27:00 pm GMT  
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு விளம்பியவை...

அருமையான தகவல்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Fri Dec 09, 11:41:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

//சமைக்காத காய்கறிகள் என்று எவற்றை குறிப்பிடுகிறிர்கள்?//

சமைக்காமலே உண்ணக் கூடிய பழங்கள்.. இலை மற்றும் கீரை வகைகள்.. மற்றும் கரட்.. பீற்றூட்.. அவரை போன்ற காய்கறிகள்..! :)

Wed Dec 14, 08:46:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நண்டு@நொரண்டு..

வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து வாங்க தகவல்களைப் படியுங்க.. மற்றவங்களுக்கும் அறிமுகப்படுத்துங்க.. விடயங்களை பரிமாறுங்க..!

தமிழில் அதிநவீன.. நவீன அறிவியல்.. மருத்துவ விடயங்கள் மக்களை அடையனும் என்பதே எங்கள் நோக்கம். இது வியாபார இலக்கற்ற.. மொழி சார்ந்த பற்றுதலின் வெளிப்பாடு. உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி. :)

Wed Dec 14, 08:48:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க