Wednesday, December 10, 2003

முளையம் தந்த முட்டையும் விந்தும்

ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கருக்கட்டி வரும் கலத்தைச் சொல்வது நுகம் என்று...இது வளர்ந்து தருவது முளையம்...அதுதான் பின்னர் குழந்தையாக வருவது....!

இப்போ உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் முளையத்தின் ஆரம்ப நிலைக்கலங்களில் இருந்து கருக்கட்டக் கூடிய இயல்புடைய விந்தை எலியின் முளையத்தில் இருந்து பெறப்பட்ட கலங்களை வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து உற்பத்தி செய்துள்ளனர்....! ஆனால் இந்த விந்திற்கு வால் இல்லை.....! இருப்பினும் முட்டையுடன் சேர்ந்து கருக்கட்டும் இயல்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..!

இதோ போல் முளையத்தின் ஆரம்ப நிலைக் கலங்களில் இருந்து எலியின் முட்டையும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது...!

சரி இதனால் என்ன நன்மை....உண்டு... இப்போ விந்து உற்பத்தி குறைந்த கருக்கட்டும் இயல்பற்ற அல்லது முட்டை உற்பத்தி குறைந்த கருக்கட்டும் ஆற்றல் அற்ற மனிதரிடத்தும் இதே வகையில் உருவாக்கப்பட்ட விந்தையும் முட்டையையும் பாவித்து குழந்தைகளை உருவாக்க முடியும்....!

இருப்பினும் இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதை நிறைய இருக்கிறது....எல்லாம் ஆராய்ச்சி மட்டத்திலேயே இருக்கிறது....!

பதிந்தது <-குருவிகள்-> at 10:12 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க