Tuesday, February 28, 2012

மார்ச் 7 ஐபாட் 3 வெளியாகிறது. விண்டோஸ் 8 சிலேட்டுகளும் வெளி வருகின்றன.


அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை.

அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம்.



இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் விண்டோஸ் 8 வெளியீட்டுக்கான பூர்வாங்க அறிவிப்பும் வெளியிடப்பட இருக்கிறதாம்.

அப்பிள் ஐபாட் சிலேட்டுக் கணணிகளுக்கு போட்டியாக சந்தையில் அன்ராயிட் சிலேட்டுக் கணணிகளே தற்போது உள்ள நிலையில்.. மைக்குராசாவ்ட் சிலேட்டு கணணிகளும் அங்கு நுழைய இருக்கின்றன. ஐபாட் வரவோடு கணணி உலகில் சிலேட்டுக் கணணிகளின் ஆதிக்கம் வலுவடைந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:24 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க