Friday, October 10, 2008

உலகின் மிகப் பழமையான உயிரி கண்டுபிடிப்பு.



தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பூமி மேற்பரப்பில் இருந்து 2.8 கிலோமீற்றர்கள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள உருளை வடிவமான Desulforudis audaxviator என்னும் இந்த உயிரினம் பிராணவாயு இல்லாமலேயே உயிர் வாழும் என்பதுடன், அது வாழும் இடத்தில் காணப்படுகின்ற ஒரே உயிரினம் இது மாத்திரமே - அதாவது - உயிர் வாழ்வதற்கு வேறு எந்த உயிரினத்தையும் இது சார்ந்திருக்கவில்லை.

ஒளியே இல்லாத இடத்தில் உயிர் வாழ்வதுடன், ஒரு உயிரி தானாகவே இனப்பெருக்கமும் செய்துகொள்கிறது.

கார்பன், நைட்ரஜன் போன்றவை மாத்திரமே இது உயிர் வாழ்வதற்கு தேவையானவையாகும்.

சக்திக்காக இது சூரியனில் சார்ந்திராமல் நீர், ஹைட்ரஜன் மற்றும் சல்பேட் ஆகியவற்றையே நம்பியிருக்கிறது.

தகவல்: பிபிசி/தமிழ் மற்றும் பிபிசி/ஆங்கிலம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:15 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க