மனித மூளை விற்பனைக்கு..!
தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது.
செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர்.
மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூளை. ஏலவே இதற்கான மென்பொருள் நிலை வடிவம் பெறப்பட்டு விட்டதாம்.
ஒருவேளை இந்தச் செயற்கை மூளை தயாரிக்கப்பட்டால் அது உலகில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2 பில்லியன் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்கின்றனர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.
ஏற்கனவே எலிகளின் மூளையில் உள்ள கூறுகளுக்கு ஒத்த செயற்கையான கூறுகளை விஞ்ஞானிகள் தயாரித்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்.
மேலதிக தகவல் இங்கு.
Labels: செயற்கை மூளை, நீல மூளைத் திட்டம், மூளை
2 மறுமொழிகள்:
ஆர்வமூட்டும் தகவல்.
பொறுத்திருந்து பார்ப்போம்....
ஆனால், அந்த மூளையியையாவது அழிவுச் சிந்தனைகளைக் கொண்டு நிரப்பாது இருக்கட்டும்.....
//அந்த மூளையியையாவது அழிவுச் சிந்தனைகளைக் கொண்டு நிரப்பாது இருக்கட்டும்.....//
நமது எதிர்பார்ப்புக்களில் இதுவும் ஒன்று.
தங்கள் கருத்துக்கு நன்றிகள் பதி.