உலக வெப்பமுறுதலின் (Global Warming) பக்க விளைவால் 160,000 பேர் வருடம் தோறும் மரணிப்பதாக விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது...மலேரியா,டயறியா மற்றும் போசனைக் குறைபாடுகள் போன்றவை இதற்கான முக்கிய நேரடிக்காரணிகளாக இருக்கின்றன...இது ஆபிரிக்க தெற்கு,தென்கிழக்காசிய பிராந்தியத்தையே மிகவும் பாதிப்பதாகவும்...சிறிய வெப்பநிலை உயர்ச்சி கூட பெரிய அளவில் நுளம்புப் பெருக்கத்திற்கு வழிவகுப்பதாகவும்... நுளம்புகள் பரந்து தேசம் விட்டு தேசம் பெருகவும் வகை செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது...! அத்துடன் இவ்வெண்ணிக்கை 2020இல் இருமடங்காகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது..இந்த ஆய்வில் உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) ஒரு பக்காளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...!
0 மறுமொழிகள்: