ஓராண்டில் மட்டும் 0.2 மில்லியன் சிசுக்கள் படுகொலை.
உலகில் கருக்கலைப்புத் தொடர்பாக நாடுகளின் நிலைகள்.
உலகில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் கடந்த ஆண்டில் (2007) 198,499 சிசுக்கள் கருக்கலைப்பின் மூலம் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளன.
அங்கு கருக்கலைப்பு வீதம் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 21% தாலும் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 10% தாலும் அதிகரித்துள்ளது.
மொத்த எண்ணிக்கையான பெண்கள் மத்தியில் 2.5% வீதத்தால் கருக்கலைப்பு அதிகரித்துள்ளது. உயர்ந்த அளவு கருக்கலைப்பு வீதம் 19 வயதுப் பெண்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.
மாத்திரைகளைப் பாவித்து சிசுக்களை கொல்வது மொத்தக் கருக்கலைப்பில் சுமார் 35% ஆக இருக்கிறது. இது முன்னைய ஆண்டில் 30% ஆக இருந்துள்ளது.
மொத்தக் கருக்கலைப்பில் வெறும் 1% மட்டுமே குழந்தை உலகில் குறைபாட்டோடு பிறக்கப்போகிறது என்பதற்காக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட மிகுதி அனைத்தும் அவரவரின் சுயநலனுக்காக வைத்துக் கொண்ட உடலுறவுகளால் உருவான வேண்டப்படாத சிசுக்கள் என்ற வகைக்குள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.
மிக இளம் வயதுப் பெண்கள் தங்களின் பொழுதுபோக்காக பாலியலை தேர்வு செய்வதும் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் தாயாவதும் இங்கிலாந்தில் அதிகரித்து வருவது இங்கிலாந்து அரசை கிலிகொள்ளச் செய்துள்ளது.
மேலதிக தகவல் இங்கு.
Labels: இங்கிலாந்து, கருக்கலைப்பு, மனித வாழ்வியல்
0 மறுமொழிகள்: