Tuesday, July 08, 2008

ஆண்மைக்கும் வயதுண்டு.



பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது.

ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணுவில் ஏற்படும் பாதிப்புகள், கருமுட்டையை சினைப்படுத்தும் விந்தணுவின் ஆற்றலை பாதிப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க விடயத்தில், பெண்களைப்போலவே ஆண்களின் வயதும் ஒரு முக்கிய காரணி என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நன்றி பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:19 pm

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

//She said such couples should be offered IVF (where an egg is fertilised in a lab dish), and where the outer membrane of the egg seems to block sperm with DNA damage, and ICSI (where a sperm is injected directly into an egg), where the best sperm can be selected for use.//


இவர்கள் IVF தொழில்நுட்பத்தின் மூலம் வருமானத்தைப் பெருக்க இப்படிச் சொல்லி இருக்கலாம்.

விஞ்ஞானமே இப்போ வியாபாரம் ஆகிவிட்டது.

Tue Jul 08, 08:28:00 pm BST  
Blogger puduvaisiva விளம்பியவை...

குருவி நண்பா நலமா??

இந்த வார ஆனந்த விகடனில் (16.07.2008) உனது வலைபதிவை பற்றி பக்கம் 107 ல் உனது செய்தி 'ஒலிவ் எண்ணெய் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது. என்ற உனது பதிவு பற்றிய' செய்தியை எழுதி இருக்கிறார்கள் மேலும் உனது வலைபதிவின் மூலம் எளிய தமிழில் அறிவியல் செய்தி தருவதை பாரட்டி இருக்கிறார்கள்.

எனவே இன்று உனது வலைபதிவு உலக தமிழ் மக்கள் பார்வைக்கு சென்றுயுள்ளது.

மேலும் பல வளர்ச்சி கான என் வாழ்த்துகள்

அன்புடன்

புதுவை சிவா.

Fri Jul 11, 09:32:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றிகள் சிவா. உங்கள் போன்றவர்களின் ஆதரவும் உற்சாகமும் தான் எம்மை தாய்த் தமிழில் எழுதத் தூண்டுகிறது.

உங்கள் ஒத்துழைப்புக்கள் என்றும் அவசியம் என்பதுடன்.. இவை உங்களுக்காக எழுதப்படுபவை. எனவே தவறுகள் எம்மை அறியாமல் வந்திருந்தால் கூட சுட்டிக்காட்டி மெருகூட்ட வேண்டியதில் உங்கள் அனைவருக்கும் பொறுப்புள்ளது.

மீண்டும் நன்றிகள்.

என்றும் நட்புடன் குருவிகள். :)))

Fri Jul 11, 01:27:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க