எங்களைக் காப்பாற்றுங்கள்..!
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் Kadapa மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் 1985 இல் கண்டறியப்பட்டதும் தற்போது Sri Lankamalleswara விலங்குகள் சரணாலயத்தில் மிக சிறிய எண்ணிக்கையில் (25) வாழ்ந்து வருகின்றவையுமான இந்த அழகான பறவைகளை (Jerdon's courser (Rhinoptilus bitorquatus)) அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்..!
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள குறித்த விலங்குகள் சரணாலயத்தினூடு நீர்ப்பாசனத்துக்கான கால்வாய் வெட்டப்பட இருப்பதால் இப்பறவைகளின் வாழிடம் அழிக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனால் இப்பறவைகளும் உலகில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன.! எனவே இந்தப் பறவைகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்..!
மேலதிக தகவல் இங்கு
1 மறுமொழிகள்:
பதிவுக்கும், செய்திக்கும் நன்றி!