Monday, December 31, 2007

மரண அறிவித்தல் - ஒரங்குட்டான், மியாமி.



தற்கால உலகில் வாழ்ந்த உலகிலேயே வயது முதிர்ந்த ஒரங்குட்டானாக இனங்காணப்பட்ட ஒரங்குட்டான்.

இன்றைய உலகில் வாழும் குரங்குகளில் ஒரங்குட்டான் (orang-utan) என்ற வகை பழைய உலகுக் குரங்குகளும் அடங்குகின்றன. மனிதக் குரங்குகள் வகைக்குள் அடங்கும் இவை சுமாத்திராப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

இவ்வகை ஒரங்குட்டானில் அமெரிக்க மியாமி மிருகக் காட்சிச்சாலையில் வாழ்ந்து வந்த ஒரங்குட்டான் மூளைப் புற்றுநோய் காரணமாக தனது 55வது வயதில் மரணமடைந்துள்ளது. பெண் ஒரங்குட்டானான இதற்கு Nonja என்று பெயரிடப்பட்டிருந்தது. இது 5 குட்டிகளுக்குத் தாயும் ஆகும்.

உலகிலே வயது முதிர்ந்த ஒரங்குட்டான் இது என்று அமெரிக்க மியாமி மிருகக் காட்சிச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் குரங்கு கொலண்ட் வழியாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

சுமாத்திரா தீவில் இவ்வகை குரங்குகளின் எண்ணிக்கை தொடர்சியாக குறைந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனின் இயற்கைச் சூழல் மீதான ஆதிக்கமும் இக்குறைவுக்குக் காரணமாகும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:53 pm | மறுமொழிகள் | Back to Main

Sunday, December 30, 2007

மனிதப் பரம்பரையலகுப் பட்டியல் (Human Genome) - காணொளி



Human genome என்பது ஒவ்வொரு தனி மனிதனிலும் உள்ள 23 சோடி நிற மூர்த்தங்களில் காணப்படும் பரம்பரை அலகுகளின் பட்டியல் என்பதாகும். மனிதனில் கிட்டத்தட்ட 30,000 பரம்பரை அலகுகள் இனங்காணப்பட்டுள்ளன.

முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட தனி மனிதர்களிடையே உள்ள பரம்பரை அலகு வேறுபாடென்பது அதிகம் என்று மனிதப் பரம்பரை அலகுப்பட்டியலை இவ்வாண்டில் (2007) இறுதி வடிவிட்ட போது தெரியவந்துள்ளது.

மனித பரம்பரை அலகுப் பட்டியல் 2003 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 1990 இல் இதற்கான ஆய்வுகளை ஆரம்பிக்க அடித்தளமிடப்பட்டது.

மனிதனின் அறிவியல் உலகில் 2007 ஆண்டும் ஒரு படிக்கல்லாக அமைகிறது. காரணம் இந்த ஆண்டிலேயே மனித பரம்பரை அலகுப்பட்டியல் (Human genome) விஞ்ஞானிகளால் பல வழிகளிலும் முழுமை பெறச் செய்யப்பட்டுள்ளது..!

இது மருத்துவத்துறைக்கும் மனிதன் பற்றிய அறிவியல் ஆய்வுக்கும் முக்கியமாய் அமையிலும் தனிமனித ரகசியங்களைப் பேணுவதில் சிக்கற்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மனித பரம்பரை அலகுப்பட்டியல் தயாரிப்புத் தொடர்பான காணொளி இங்கு.

மனித பரம்பரை அலகுப்பட்டியல் தொடர்பான மேலதிக செய்திகள் இங்கும் உண்டு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:00 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, December 25, 2007

அனைவருக்கும் விலங்கியல் - 1



ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல.

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது.

ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது.

இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

-----------



சீனாவில் சைபீரியப் பனிப் புலிகளுக்கு ஆபத்து

சைபீரிய பனிப் பிரதேச புலிக்குட்டிகள் இரண்டு சீனாவின் மிருகக்காட்சி சாலையில் குளிர்சாதனப் பெட்டிக்குள் இறந்து கிடந்தது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இவ்வகைப் புலிகள் அழிவின் விளிம்பிலுள்ள ஓர் இனமாகும். சைபீரியக் காடுகளில் இப்புலிகள் மொத்தமே 400தான் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஒரு சில நாட்களுக்கு முன்பாகத்தான் இன்னொரு சைபிரியப் பெண் புலியும் இதே மிருகக்காட்சி சாலையில் இறந்து கிடந்தது.

சீனாவில் புலிகளின் உடற்பாகங்கள் நாட்டு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ நற்குணங்களுக்காக மிகப்பெரிய விலைக்கு புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்படும் நிலை.

அரசு அனுமதியுடன் சுமார் ஒரு டஜன் தனியார் புலிப் பண்ணைகள் சீனாவில் செயல்படுகின்றன. அந்தப் பண்ணைகளில் பெரும்பான்மையானவற்றில் புலிகள் மிக மோசமான சூழலில் வைக்கப்பட்டுள்ளன என்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 4:59 pm | மறுமொழிகள் | Back to Main

மிக நுண்ணிய பைபிள்.



விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை.

பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள்.

உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன.

தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள்.

அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.

bbc/tamil

பதிந்தது <-குருவிகள்-> at 4:56 pm | மறுமொழிகள் | Back to Main

Tuesday, December 18, 2007

உலகில் கடல் மட்டம் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அதிகரிக்கும்.



பூமிப் பந்தின் மேற்பரப்பில் சுமார் 75% சமுத்திரத்தால் நிறைந்திருக்கிறது. இந்தப் பூமியில் சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கு மிகுதியால் சமீப நூற்றாண்டுகளில் பல சூழல் மாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொசைட்டின் அளவு அதிகரிப்பது உட்பட பல பாதகமான விளைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. இதனால் பூமி வெப்பமுறுதல் என்ற மிகப் பாதகமான; பூமிப்பந்தில் ஒப்பீட்டளவில் விரைந்து மாற்றங்களை ஏற்படுத்தவல்ல நிகழ்வு அரங்கேற ஆரம்பித்தது.

பூமி வெப்பமுறுதலின் நேரடி விளைவால் ( பல பாதகமான மறைமுக விளைவுகளும் ஏற்பட்டுள்ளன) துருவங்கள் மற்றும் உயரமான மலை உச்சிகளில் படிந்திருக்கும் பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தன. கடலில் உள்ள நீர் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வின் விளைவால் விரிவடைய ஆரம்பித்தது. இதனால் உலகக் கடல்மட்டம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தது. தற்போதும் உலக வெப்பமுறுதல் விளைவு தொடர்ந்து வருவதால் முன்னர் எதிர்வு கூறப்பட்டதை (81 சென்ரி மீற்றர்கள்) விட இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் இரண்டு மடங்கால் (163 சென்ரி மீற்றர்கள்) அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல தாழ்நிலப் பிரதேசங்கள் கடலால் விழுங்கப்படப் போகின்றன..! பூமிப்பந்தில் இந்த மாற்றம்(மனிதனின் சூழல் மீதான செல்வாக்குக்கு அப்பால்) இயற்கையாக நிகழ வேண்டின் பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும் ஆனால் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கும் அவன் வெளியிடும் சூழலில் விரைந்து மாற்றங்களைத் தரவல்ல சூழல் பாதகக் காரணிகளின் அளவும் அதிகரித்து வருவதே பூமிப்பந்தில் இந்த மாற்றங்களை விரைவுபடுத்த வழி செய்துள்ளது என்பதுடன் மனிதன் உட்பட்ட உயிரினப் பேரழிவுக்கும் வித்திட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Rising seas 'to beat predictions'

The world's sea levels could rise twice as high this century as UN climate scientists have previously predicted, according to a study.

The Intergovernmental Panel on Climate Change proposes a maximum sea level rise of 81cm (32in) this century.

But in the journal Nature Geoscience, researchers say the true maximum could be about twice that: 163cm (64in).

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 5:22 am | மறுமொழிகள் | Back to Main

Friday, December 14, 2007

அந்தாட்டிக்கா நோக்கி விரியும் மனிதனின் அச்சுறுத்தல்கள்.



அந்தாட்டிக்கா எனும் பனி படர்ந்த கண்டம்.

பெருமளவில் மனிதனின் நேரடி அச்சுறுத்தல் மற்றும் குழப்பங்கள் இன்றி இருக்கும் பனி படர்ந்த அந்தாட்டிக்கா எனப்படும் பூமியின் தென்முனைப் பகுதி மனிதர்களின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் நேரடி அச்சுறுத்தல்களுக்கும் பாதிப்புக்களுக்கும் மற்றும் குழப்பங்களுக்கும் உள்ளாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியர்கள் அந்தாட்டிக்காப் பனிப் பாறைகள் மீது விமான ஓடுதளம் அமைத்து போக்குவரத்து விமானம் ஒன்றை வெற்றிகரமாக தரை இறக்கியது சாதனை எனினும் இதன் பின்னால் வேதனைகள் தொடரலாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது.

இன்று ஆய்வுகளுக்காக திறக்கப்படும் அந்தாட்டிக்கான போக்குவரத்துக்குப் பாதைகள்.. நாளை உல்லாசப் பயணத்துறைக்கும் வளங்களைத் தேடல் செய்யவும் என்று திறந்து விடப்படும் போது சூழல் மாசடைதல் அங்கும் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். ஏலவே மறைமுகமாக சூழல் மாசடைதல் விளைவுகளைச் சந்தித்து வரும் அந்தாட்டிக்கா எனி நேரடிப் பாதிப்புக்களையும் உள்வாங்க நேரிடலாம்.

பூமிவெப்பமுறுதல் விளைவால் அந்தாட்டிக்காப் பனிப்பாறைகளும் பெருமளவில் உருகி வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.அந்தாட்டிக்காப் பனிப்பாறைகள் உலகின் 70% நன்னீர் இருப்பைக் கொண்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் சூழல் வெப்பப அதிகரிப்பால் பனிப்பாறைகள் உருகி அழியும் போது அந்தாட்டிக்காவில் புதைந்துள்ள வளங்களைத் தேட மனிதன் இன்றே அடித்தளம் இட்டுவிட்டான் போல் உள்ளது அவனின் செயற்பாடுகள்.

எதுஎப்படியோ மனிதனின் பல செயற்பாடுகள் எதிர்காலத்தில் பூமியில் அவனின் இருப்பையே சந்தேகத்துக்கு இடமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தாட்டிக்காவில் விமானம் தரையிறங்கும் காணொளி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:29 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, December 11, 2007

உலகின் மிகப் பெரிய நாக பாம்பு.



உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆராட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.6 மீற்றர் நீளம் உடைய இந்த நாக பாம்பு ஒரே தடவையில் 20 பேரை கடித்து கொல்லக்கூடிய விசத்தினை கொண்டிருக்கின்றது என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 11:27 pm | மறுமொழிகள் | Back to Main

Sunday, December 09, 2007

ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவும் இணைகிறது.



விண்ணில் பாயும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை - இஸ்ரேல்.

பேரழிவு ஆயுதங்கள் பூமிப்பந்தெங்கும் பெருகிக் கிடக்கின்ற ஆபத்து ஒருபுறமிருக்க... உலகின் இராணுவச் சமநிலையையும் நாடுகளிடையே போர் ஏற்பட்டு பேரழிவுகள் உண்டாவதையும் தடுப்பதில் ஆயுதப் போட்டா போட்டி ஒரு வகையில் உதவுகின்றது என்றால் மிகையல்ல.

ஆயுதப் போட்டா போட்டியில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அணு ஆயுதம் உட்பட்ட பேரழிவு ஆயுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பெருக்கமும் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் வகிக்கின்றன.

ஆனால் அண்மைய ஆண்டுகளில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் என்பதன் கீழ் தமது தேசத்தின் மீதும் தமது நட்பு நாடுகள் மீதும் உள்ள அந்நிய நாடுகளின் ஏவுகணைகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தடுத்து உலகின் இராணுவச் சமநிலையை மேலும் மேலும் தமக்குச் சாதகமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மிக அண்மையில்,ரஷ்சியா வெளிப்படையாகவே அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டம் ஐரோப்பாவில் ரஷ்சியாவை இலக்கு வைத்து செயற்படுவதை காரசாரமாகக் கண்டித்திருந்தது.



இஸ்ரேலின் பலஸ்ரிக் ஏவுகணைகளை எதிர்க்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம்.

07-12-2007 அன்று, இந்தியா தனது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஓரம்சமாக இஸ்ரேலின் உதவியுடன் தயாரித்த எதிரியின் ஏவுகணைகளை விண்ணில் வைத்தே தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏவுதளத்தில் இருந்து செய்யப்பட்ட இப்பரிசோதனையில் குறித்த ஏவுகணை அதன் இலக்கை வளிமண்டலத்தில் 15 கிலோமீற்றர்கள் உயரத்தில் வைத்து தாக்கி அழித்தது. இது இவ்வகை ஏவுகணைகளின் பரிசோதனையில் இரண்டாவது ஆகும்.

இப்பரிசோதனைகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ சமநிலையில் இந்தியாவின் மேலாண்மைக்கு வழி செய்ய முற்படினும் போட்டி நாடுகளும் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திலும் போட்டா போட்டியிட இடமளிப்பதோடு ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டங்களை முறியடித்துத் தாக்கவல்ல ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தேவையையும் விரிவாக்கத்தையும் உலகில் ஏற்படுத்தி நிற்கும் என்பது யதார்த்தமாகி வருகிறது.

இதன் மூலம் உலக மக்கள், பயங்கர ஆயுத அச்சுறுத்தல்கள் மத்தியில் ஆயுதங்களால் எல்லையிடப்பட்ட அகண்ட பூமியில் தொடர்ந்தும் சிறைவைப்பட்டு, ஜனநாயகம் என்று உச்சரிக்கப்படும் உலக வல்லாதிக்க இராணுவ விரிவாக்கத்தின் மக்கள் ஆக்கிரமிப்புக் கொள்கையின் கீழ் போலியாக காட்டப்படும் அல்லது வழங்கப்படும் சுதந்திரத்தினை அனுபவித்தபடி... பேரழிவுக்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியபடி உலக அரசுகளால் அடக்கி அச்சுறுத்தி ஆளப்படவே வகை செய்யப்படுகின்றனர்...!

----------

Orissa 7th Dec 2007 : India successfully carried out the second launch of a single stage nterceptor missile against an incoming ballistic missile at the Wheeler Island near Bay of Bengal, close to the Dhamra coast in eastern Orissa on Thursday December 6. The officials said that The endo-atmospheric interceptor collided with its target at an altitude of 15 Km, exactly as designed.

மேலதிக தகவல் இங்கு - காணொளி.

பதிந்தது <-குருவிகள்-> at 6:02 am | மறுமொழிகள் | Back to Main

Friday, December 07, 2007

நிஜக் கரப்பான் பூச்சிகளை ஏமாற்றிய இயந்திர கரப்பான்



இயந்திரக் கரப்பானைக் கண்டு ஏமாறும் நிஜக் கரப்பான்கள்

தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு கரப்பான் ரோபோவைச் செய்து அதனைக் கொண்டு உண்மையான கரப்பான்களை ஏமாற்ற வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் ஜோஸ் கலோய் என்பவரே இந்த தானாக இயங்கக்கூடிய இந்த ரோபோ கரப்பான் பூச்சியை வடிவமைத்தவராவார்.

உண்மையான கரப்பான்களின் மணம் குணத்தை ஒரு பில்டர் பேப்பரில் பூசி அதனை இந்த ரோபோ கரப்பான் பூச்சியில் பொருத்தினார்கள் விஞ்ஞானிகள். பின்னர் உண்மையான கரப்பான்கள் வாழும் ஒரு இடத்தில் இந்த ரோபோ விடப்பட்டது.

இந்த ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான்கள் ஏற்கின்றனவா, அதன் மூலம் கரப்பான்களின் கூட்டாக முடிவெடுக்கும் திறனில் தம்மால் செல்வாக்குச் செலுத்த முடிகிறதா என்றெல்லாம் விஞ்ஞானிகள் அறிய முயன்றனர்.

ஆம், அவர்களால் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற முடிந்தது. போலி ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான் என்று நம்பி தம் கூட்டத்தில் கரப்பான்கள் சேர்த்துக்கொண்டன.

bbc/tamil

பதிந்தது <-குருவிகள்-> at 8:58 pm | மறுமொழிகள் | Back to Main

காச நோய் ( TB ) 5,00,000 வருடங்கள் பழமையானது.



ஆதியான காசநோய்க்குரிய ஆதாரம் காணப்பட்ட மனிதச் சுவடு.

தற்கால மனிதனின் முதன்மை மூதாதையர் சுமார் 5,00,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடு. அண்மையில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்ட 5,00,000 ஆண்டுகள் பழைமையான Homo erectus இல் அடங்கும் இளம் மனிதச் சுவடு ஒன்றில் காசநோய்க்கான (TB) நுண்கிருமிகள் வாழ்ந்ததற்கான அறிகுறியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆபிரிக்காவில் இருந்து பூமியின் வடக்கு நோக்கி குடிபெயர்ந்த மனிதரிலேயே இந்தத் தொற்று அவதானிக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தோலுக்குரிய நிறமணிகள் சூரிய கதிர்ப்பில் இருந்து பாதுகாப்பை மட்டும் வழங்குவதில்லை. அவை சூரியக் கதிர்ப்பில் இருந்து தொகுக்கப்படும் விற்றமின் டியின் (Vit - D)அளவிலும் பங்களிப்புச் செய்கின்றன. மனிதன் சரியான அளவில் சூரியக் கதிர்ப்பில் இருந்து விற்றமின் டி யை தொகுக்காத போது (கறுப்பு தோலுக்குரிய மலனின் நிறமணிகள் சூரியக் கதிர்ப்பில் இருந்து தோலை பாதுகாக்க தோலுள் ஊடுருவும் கதிர்ப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதால் விற்றமின் டி தொகுப்பை குறைவடையச் செய்கின்றன)உடலில் உள்ள இயற்கைப் பாதுகாப்பான நிர்பீடணச் செயற்பாடு பலவீனமடைகிறது. இதுவே கறுப்புத் தோல் ஆதிமனிதனில் காசநோய்க்கான தொற்றை அதிகரித்துள்ளதாம்.

ஆதிகால மனிதனில் அதிக மரணத்தை ஏற்படுத்திய TB தற்போதும் உலகில் ஆபத்தான அளவில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான மருத்துவச் சிகிச்சைகள் பெறப்படும் போது இந்நோயால் ஏற்படும் மரணத்தை 100% தடுக்க முடியும்..!

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 6:39 am | மறுமொழிகள் | Back to Main

Thursday, December 06, 2007

இன்னிசை பாடும் குருவிகள்.



இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே:

நம்மோட பூமியின் இயற்கையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதனுடைய அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.



இப்ப விடயத்துக்கு வாறன்.. மடகஸ்கார் என்ற தேசம் மனித இடைஞ்சல் இல்லாமல் இருந்த தேசம். அதுவும் இப்ப மனிதரால இடைஞ்சலாகிட்டு வருகுது. இருந்தாலும் அங்கு இன்னும் பல இன உயிரினங்களும் இயற்கையும் உறவாடி மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றன.



அப்படி அங்கு வாழ்ந்து வரும் சுமார் 127 பறவை இனங்களின் இன்னிசைக் குரல்களை ஒலிப்பதிவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில மனிதரின் செயற்பாட்டால் அகதிகளாகி அழிவைச் சந்தித்து நிற்கின்ற இனங்களில் அடங்குகின்றன.

கேட்க என்ன ஒரு இனிமை. எந்த செயற்கையான இசைக்கும் இல்லாத மகிமை அவற்றின் குரலில் ஒலிக்கிறது.



நீங்களும் கேட்டு மகிழுங்கள் இந்த இணைப்பை அழுத்தி.

வேறு பல குருவிகளின் இன்னிசைக்கு இவ்விணைப்பை அணுகவும்.

தமிழில்: யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 8:34 am | மறுமொழிகள் | Back to Main

Wednesday, December 05, 2007

விவாக ரத்துக்களை இயற்கை அன்னை வெறுக்கிறாள்.



ஒற்றுமையான குடும்பங்களை விரும்பும் இயற்கை.

இப்போ எல்லாம் மனிதத் தம்பதியரிடையே புரிந்துணர்வுக்கான வாய்ப்பு எழ முதல் விவாகரத்துக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் உலகில் திருமணமான அல்லது கூடிவாழும் தம்பதியர் பிரிவதும் அதிகரித்து வருகிறது. அப்படிப் பிரிவோர் தனித்து வாழ்வதும் அல்லது இன்னோர் துணையைத் தேடுவதும் என்று பல வடிவங்களில் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க அல்லது விரிவுபடுத்த முனைகின்றனர்.

அது அவர்களின் சுதந்திரம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அவர்களின் இந்தச் செயற்பாடு இயற்கை அன்னைக்குப் பாதகமாக அமைகிறதாம். உலகில் திருமணம் செய்து ஒற்றுமையாக வாழும் குடும்பத்தினர் இயற்கைக்கு அதிகம் பாதகமில்லாத வகையில் வளங்களைச் செலவழிப்பதுடன் அவர்கள் வெளியிடும் இயற்கைக்கு ஆபத்துமிக்க கழிவுகளின் அளவும் கட்டுபட்ட அளவில் அமைந்திருக்கிறதாம். ஆனால் விவாகரத்துப் பெற்றுப் பிரிவோர் தனிக் குடித்தனம் கும்மாளம் என்று வாழ்க்கையை வேறு பல தளங்களுக்குள் நகர்த்திச் செல்ல விரும்புவதாலும் உதாசீனமாக வாழ விளைவதாலும் அக்கறையற்ற பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்வதாலும்.. அவர்களின் வளப்பயன்பாடும் இயற்கையை நாசம் செய்வதில் உள்ள பங்களிப்பும் அதிகரித்துச் செல்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்து விவாகரத்துக்களால் இயற்கை அன்னைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளனர்..!

இதனால்தான் ஆதிகாலத்தில் கூட்டுக்குடும்பம் என்பதை வலியுறுத்தினரோ. இப்போ எல்லாம் தனிமனித சுதந்திரம் அளவுக்கு அதிகமாகி மனிதர்களும் சீரிய சிந்தனைக்கு இடமளிக்காமல் தான்தோன்றித்தனமாக வாழ விளைகின்றனர். அதுவும் இயற்கைக்கு ஒரு சீரழிவுதான்..!

மேலதிக தகவல் இங்கு.

--------------

Mother Nature feels the pains of divorce

WASHINGTON - Divorce can be bad for the environment. In countries around the world divorce rates have been rising, and each time a family dissolves the result is two new households.

"A married household actually uses resources more efficiently than a divorced household," said Jianguo Liu, an ecologist at Michigan State University whose analysis of the environmental impact of divorce appears in this week's online edition of Proceedings of the National Academy of Sciences.

More households means more use of land, water and energy, three critical resources, Liu explained in a telephone interview.

Households with fewer people are simply not as efficient as those with more people sharing, he explained. A household uses the same amount of heat or air conditioning whether there are two or four people living there. A refrigerator used the same power whether there is one person home or several. Two people living apart run two dishwashers, instead of just one.

Source: On the Net: Yahoo.com PNAS: http://www.pnas.org

பதிந்தது <-குருவிகள்-> at 7:24 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, December 04, 2007

மதியால் மனிதரை வென்ற வாலில்லாக் குரங்குகள்.



கணணித்திரையில் தோன்றி மறையும் உருவங்களை ஞாபகப்படுத்தி மீண்டும் அதே உருவங்கள் கணணித்திரையில் தோன்றும் போது முன்னர் அவை எங்கெங்கு தோன்றின என்பதை சரிவர இனங்காட்டும் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக மாணவர்களை வெறும் 5 வயதேயான சிம்பென்சி (பழைய உலகுக் குரங்கு - மனிதக் குரங்கு) வெற்றி கொண்டுள்ளது.

குட்டிக் குரங்குகளின் பெற்றோரையும், மனிதரையும் விட சிம்பன்சிக் குட்டிகளே அதிக ஞாபக சக்தி கொண்டு இந்தப் போட்டியில் செயற்பட்டு வெற்றி பெற்றுள்ளன என்பதை ஜப்பானில் இப்பரிசோதனையை நடத்திய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

வழமையாக மனிதனே அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவன் என்ற சிந்தனையை இந்தப் பரிசோதனை மாற்றி அமைத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாய்வு தொடர்பான காணொளி இங்கு.

மேலதிக தகவல் இங்கு

------

Chimpanzees are the real kings of the jungle when it comes to memory, scientists have discovered.

Young primates even beat university students in tests which revealed they have an 'extraordinary' photographic memory.

Juvenile chimps and their mothers were pitted against a group of undergraduates in a series of memory experiments.

source: metro.co.uk

பதிந்தது <-குருவிகள்-> at 3:33 pm | மறுமொழிகள் | Back to Main

Saturday, December 01, 2007

உலக எயிட்ஸ் தினம் - 40 மில்லியன் மக்கள் எச் ஐ வியுடன்.



மார்கழி 1 ம் திகதி உலக எயிட்ஸ் தினமாக எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்று கொண்டாடப்படுகிறது.

உலகில் சுமார் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய்க்கான எச் ஐ வி வைரஸ் தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் எதிர்கால உலகின் பொருளாதாரம், சந்ததி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் இள வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகில் ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் எயிட்ஸ் அதிகம் கோலோஞ்சியுள்ளது. மத்திய கிழக்கு போன்ற இடங்களில் அதன் பரவல் குறைவாகவே அமைந்துள்ளது.

எயிட்ஸ் தொற்றுள்ளவர்களுடன் நடைபெறும் பாலியல் உறவுகள், அறிமுகமற்றவர்களுடன் எழுந்தமானமாக நிகழும் தவறான பாலியல் களவு நிலை உறவுகள் மற்றும் எயிட்ஸ் தொற்றுள்ளவரின் உடற்பாய் பொருள் (இரத்தம்) பரிமாற்றத்தின் மூலமாக எயிட்ஸுக்கான வைரஸ் பரவிவருகிறது.

எயிட்ஸ் தொற்றுள்ள ஒருவரின் அருகில் வசிப்பதாலோ சாதாரணமாகத் தொடுவதாலோ எயிட்ஸ் பரவுவதில்லை.
எயிட்ஸை உருவாக்கும் எச் ஐ வி வைரஸுக்கள் உடலுக்கு வெளியே அதிக நேரம் உயிர்வாழா என்பதால் மேற்படி தொற்றுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை..!

உலகில் இருந்து எயிட்ஸை அழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பினும் எயிட்ஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதே எயிட்ஸ் நோய் தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கு சிறந்த வழியாகும். எனவே நம்பிக்கைக்கூரியவர்களுடனான பாதுகாப்பான பாலியல் ஒழுக்கமுள்ள நடத்தைகளே இதில் அனைவருக்கும் அவசியமாகிறது..!

எயிட்ஸ் தொற்றுக் கண்டவர்கள் இரத்ததானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:35 am | மறுமொழிகள் | Back to Main