Saturday, March 29, 2008

பூமிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா..! (Earth Hour Awareness Post)



29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.

மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி மீள முடியா வளங்களுள் அடங்கும் சுவட்டு எரிபொருட்களின் பாவனை அளவையும் குறைத்துக் கொள்ள முடியும் என்பதை உலகெங்கும் வாழும் மக்களுக்கு உணர்த்த இந்த பூமிக்கு ஒரு மணித்தியாலம் என்பது இன்றைய நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்றை கூகிள் முகப்பு கறுப்பு நிறப்பின்னணியில் வெளிப்படுகிறது. வழமையாக அது வெண்ணிறப் பின்னணியில் வெளிப்படுவதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 am | மறுமொழிகள் | Back to Main

Friday, March 28, 2008

சஞ்சிகைகள் விதைக்கும் மாயத்தனத்தால் ஆண், பெண் மனநிலை பாதிப்படைகிறது.



இளம் (18 வயது தொடங்கி 36 வயது வரை உள்ள) ஆண்களும் பெண்களும் தங்கள் தங்கள் உடலை எப்படி கவர்ச்சியாக வைத்திருப்பது என்பதை சொல்ல என்று வெளியிடப்படும் சஞ்சிகைகளில் உள்ள படங்கள் மற்றும் உடற்பயிற்சி அறிவுறுத்தல்கள் ஆண், பெண் உளவியலில் பாதிப்பை உண்டு பண்ணத்தக்க அபாயத்தைக் கொண்டிருப்பதாக University of Winchester நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சஞ்சிகைகள் வெளியிடும் கவர்ச்சிகரமான படங்கள் மற்றும் தகவல்களை படித்துவிட்ட ஆண்களும் பெண்களும் தங்களையும் அப்படி உருவாக்கினால் தான் தம்மையும் எதிர்ப்பாலார் கவர்வார்கள் என்ற எண்ணத்தை மனதில் பதித்து செயற்பட ஆரம்பிப்பதோடு தமது உடலமைப்பு அவ்வாறு கவர்சியாக இல்லாத சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக கவலையையும் விரக்தியையும் மனதில் வளர்த்துக் கொண்டு எப்படியாவது சஞ்சிகைகளில் உள்ள மாதிரிக்கு தம்மை உருமாற்ற வேண்டும் என்ற வெறியில் செயற்பட ஆரம்பிக்கின்றனராம். இது சில வகை மன விரக்தி அல்லது மனச் சஞ்சலத்துக்கு அல்லது பாதிப்புக்கு இட்டுச் செல்வதாக ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:31 am | மறுமொழிகள் | Back to Main

Thursday, March 27, 2008

'கணணி விளையாட்டுகளாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டு' - ஆய்வு



கணினியில் குழந்தைகள் விளையாட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, புதிய தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க வாய்ப்புகளை குழந்தைகளுக்கு வழங்கினாலும், டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் பற்றியும் பெற்றோர் அறிந்துவைத்துக்கொள்ளுதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டை தயாரித்த மனோதத்துவ நிபுணர் தான்யா பைரன் அவர்களின் கருத்துப்படி, குழந்தைகளைத் தனியாக கம்பியூட்டரில் விளையாடவிடுவது என்பது கண்காணிப்பு மேற்பார்வை இல்லாமல் அவர்களை தனியே வீட்டுக்கு வெளியில் விளையாட விடுவதைப் போன்றதே என்று குறிப்பிட்டுள்ளது.

கணினி விளையாட்டுகள் தரப்படுத்தப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும், அவை விளம்பரம் படுத்தப்படுவது குறித்து விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கணினி இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அறிவூட்ட பிரச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:21 pm | மறுமொழிகள் | Back to Main

Wednesday, March 26, 2008

அந்தாட்டிக்கா பனி விரைந்து உருகிவருகிறது.



பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிப்படிவுகள் அண்மைக்கால பூமி வெப்பமுறுதல் ஏற்படுத்திய சூழல் வெப்ப அதிகரிப்பால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட விரைந்து உருகி வருவதல் உலகில் பல சிக்கல்களைத் தோன்றிவித்து வருகின்றது.

அந்த வகையில் அண்மையில் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட அவதானிப்புக்களின் படி அந்தாட்டிக் பனிப் பிரதேசத்தில் உறுதியானது என்று கருதப்பட்டு வந்த Wilkins Ice Shelf பகுதியில் சுமார் 160 சதுர மைல் பரப்பளவுள்ள பனிப்படிவுகள் கடந்த பெப்ரவரி முடிவோடு உருகியுள்ளதாகவும் தற்போது 25 X 1.6 mile விஸ்தீரனமுள்ள பெரும் பனிப்பாறை வேகமாக உருகி வருவதுடன் பிரதான பனிப்படிவிலிருந்தும் பிளந்து பிரிந்து செல்லத் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துரைத்திருக்கின்றனர்.

மேலதிக தகவல் இங்கு - பிரதான இணைப்பில் காணொளியும் உண்டு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:57 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, March 25, 2008

கூண்டோடு செத்து மடியும் தேனிக்கள்.



அமெரிக்காவில் இருக்கின்ற தேனிக்களெல்லாம் அண்மைக்காலமாக ஒட்டு மொத்தமாக கூட்டத்தோடு பறந்து சென்று செத்து மடிகின்றன.

இந்தத் தேனிக்கூட்டம் அப்படியே கூண்டோடு செத்து மடிவதற்கான காரணம் என்ன என்பதை அறிய நிறைய பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

திடீரென தமது கூட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் தேனிக்கள் அப்படியே செத்து விடுகின்ற இந்த நிகழ்வு அங்கு இன்னமும் புரியாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.

இதனால், தேனிக்களின் மொத்த எண்ணிக்கை 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது, ஆனால், இதற்கு என்ன காரணம் என்று இதுவரை எவருக்கும் தெரியவில்லை.

தாம் ஒரு நெருக்கடி நிலையின் ஆரம்பத்தில் இருப்பதாக தேனிக்களை வளர்ப்போர் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு விளையும் உணவுப்பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு தேனிக்களின் மூலமே மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகி விளைகின்றன. இதனால், அங்கு உணவுப்பொருட்களின் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:36 pm | மறுமொழிகள் | Back to Main

Saturday, March 22, 2008

மிக மிகப் பழைய நட்சத்திர வெடிப்பு தற்போதே பூமியில் உணரப்படுகிறது.



அகிலத்தின் (universe)தற்போது வரையான ஆயுள் காலம் அரைவாசியைக் கடந்த போது நிகழ்ந்த பெரியதொரு நட்சத்திர வெடிப்பின் வாயிலாகப் பிறந்ததாகக் கருதப்படும் கதிர்ப்புகள் நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள இந்த வெடிப்பு தற்போதுதான் பூமியில் உணரப்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் போது கிளம்பிய கதிர்ப்புக்களை தற்போது பூமியில் இருந்து வெற்றுக்கண்ணாலும் கண்டு உணர முடியுமாயினும் இதுவரை அப்படியான பதிவுகள் எதுவும் நாசாவுக்குக் கிடைக்கவில்லை.

குறித்த நட்சத்திரம் எமது சூரியனைப் போன்று 40 மடங்கு பெரியதாக இருந்த போது வெடித்துச் சிதறியுள்ளது.

Star explodes halfway across universe

WASHINGTON - The explosion of a star halfway across the universe was so huge it set a record for the most distant object that could be seen on Earth by the naked eye.

The aging star, in a previously unknown galaxy, exploded in a gamma ray burst 7.5 billion light years away, its light finally reaching Earth early Wednesday.

The gamma rays were detected by NASA's Swift satellite at 2:12 a.m. "We'd never seen one before so bright and at such a distance," NASA's Neil Gehrels said. It was bright enough to be seen with the naked eye.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 4:34 am | மறுமொழிகள் | Back to Main

Friday, March 21, 2008

கருப்பையை வாடகைக்கு விட்டு இந்தியப் பெண்கள் சாதனை.



றுபீனா என்ற பெண் கருப்பையை வாடகைக்கு விட்டு ஒரு அழகிய வெள்ளையினக் குழந்தையை அமெரிக்க உயிரியல் தாய்க்காகப் பெற்றெடுத்துள்ள காட்சி.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு கூட இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.



IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கும் வாடகைத் தாய்களுக்கும் உதவும் டாக்டர் Patel.

vitro முறைக்கருக்கட்டல் பொறிமுறையில் தேர்ச்சி பெற்ற இந்திய பெண் வைத்தியரான Dr Patel கூறுகையில் இந்த முறைமூலம் ஒருவருக்கு ஒருவர் உதவக் கூடியதாக இருப்பதுடன் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கும் ஓரளவு வருமானம் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இதே முறையை தான் அமெரிக்காவில் மேற்கொண்டால் இதை விட உயர்வாக சம்பாதிக்க முடியும் எங்கிறார்.



கருப்பையை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வீடு கட்டும் புஷ்பா எனும் பெண்ணும் அவளின் குடும்பத்தினரும்.

கருப்பையை வாடகைக்கு விடுதல் உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகி உள்ள போதும் இந்தியாவில் கூலிக்கு வாடகைக்கு விடுதல் சட்டப்படி பெண்களுக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:55 pm | மறுமொழிகள் | Back to Main

ரைரனில் கடல்.



சனிக் கோளின் உபகோள்களில் ஒன்றான ரைரன். (கசினி விண்கலம் அனுப்பிய படம்)

எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சனிக் கோளின் உபகோளான (சந்திரனான) ரைரனில் 62 மைல்கள் தடிப்புள்ள பனிப்படலத்தின் கீழ் நீராலான கடல் இருக்கக் கூடிய வாய்ப்புக்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கசினி என்ற சனிக் கோள் மற்றும் அதன் உபகோள்களை ஆராயச் சென்றுள்ள விண்கலத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையே சனிக்கோளைப் போல அதன் உபகோள் ஒன்றிலும் வளையங்கள் காணப்படுவதாக அண்மையில் கசினி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:52 am | மறுமொழிகள் | Back to Main

Wednesday, March 19, 2008

மெதேன் மற்றும் நீராவியுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு.



எமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 63 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரம் ஒன்றை மிக நெருங்கிய பாதையில் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும், எமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளை ஒத்த பருமனுடைய கோளின் வளிமண்டலத்தில் மெதேன் மற்றும் நீராவி போன்ற காபன் சார் உயிரின உற்பத்திக்கு அடிப்படையான இராசாயனக் கூறுகள் இருப்பதை விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும் HD 189733b என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் அதன் சூரியனை மிக நெருங்கிச் சுற்றிவருவதால் அதன் வெப்பநிலை காபன் சார் உயிரினங்கள் அக்கோளில் இருப்பதற்கான சாத்தியக் கூறை அதிகம் கொண்டிருக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விண்ணியல் ஆய்வாளர்கள் இதுவரை சுமார் 270 கோள்களை எமது சூரிய உடுத்தொகுதிக்கு அப்பால் இனங்கண்டுள்ளனர்.அவற்றுள் வளிமண்டத்தில் நீராவி மற்றும் மெதேன் கொண்ட கோளாக இந்தக் கோள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:17 pm | மறுமொழிகள் | Back to Main

Wednesday, March 12, 2008

எறும்புகள் ஒற்றுமையின் கூட்றுறவின் சின்னமா.. இல்லவே இல்லை.



உலகில் கூட்டுச் செயற்பாடுக்கு உதாரணமாகப் பேசப்படும் எறும்புகள் உண்மையில் அப்படியன்று என்று மிகச் சமீபத்திய விஞ்ஞான ஆய்வென்று தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இருந்து எறும்புகள் மத்தியில் சுயநலமும் துஸ்பிரயோகமும் தவறான வழிகாட்டலும் என்று கூட்டுறவுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக எறும்புகள் மத்தியில் உள்ள அரச (ஆண் (அரசன் எறும்பு), ராணி (பெண் எறும்பு)மத்தியில் ஆண் எறும்புகள் செய்யும் பரம்பரை அலகுப் பரிவர்த்தனை மற்றும் தேர்வு நிகழ்வுகளின் போது வேலையாள் எறும்புக்களுக்கு எதிராக இவை அதிகம் நடைபெறுகின்றன என்று அறியப்பட்டுள்ளது..! இதை அரச மட்ட துஸ்பிரயோகமாக, சுயநலமாக விஞ்ஞானிகள் இனங்காண்கின்றனர்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:41 pm | மறுமொழிகள் | Back to Main

Thursday, March 06, 2008

செவ்வாய் கிரகத்தில் பெரும் பனிச் சரிவு!



செவ்வாயில் பனிச் சரிவு நிகழ்வை அடுத்து தூசப்படை எழும் காட்சி.

செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்டு வரும் பனிச் சரிவுகளை தத்ரூபமாக படம் பிடித்து அனுப்பியுள்ளது அந்த கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டிருக்கும் விண்கலம்.

செவ்வாய் கிரக, பனிப் புயல்களின் ஆக்ஷன் படங்கள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் நாஸா அனுப்பிய 'மார்ஸ் ரெகனைஸன்ஸ் ஆர்பிட்டர்' என்ற அந்த விண்கலம், கடந்த மாதம் இந்த படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. மொத்தம் நான்கு பனிச் சரிவுகளை அது படம் எடுத்துள்ளது.

ஒரு படத்தில் பெரிய பனி மலையிலிருந்து ஐஸ் கட்டிகள் பெயர்ந்து விழுகின்றன. பெயர்ந்து விழும் பனிக் கட்டிகள், செவ்வாய் கிரகத்தின் வட முனைப் பகுதியில் சேர்ந்து கிடக்கின்றன.

பனி மலை உடைந்து பனிக் கட்டிகள் சரிந்து விழுந்ததால் பெரும் பனிப் புகை மண்டலமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் புகை மண்டலத்தின் உயரம் கிட்டத்தட்ட 590 அடி.

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை நிகழ்வு விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாஸாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வக விஞ்ஞானி காண்டிஸ் ஹன்சன் கூறுகையில், இந்த நிகழ்வு நமக்குக் கிடைத்திருப்பது முற்றிலும் தற்செயலானது. இதுதொடர்பாக தீவிர ஆய்வில் தற்போது இறங்கியுள்ளோம்.

இந்த மாதிரியான பனிச் சரிவுகள் அடிக்கடி ஏற்படுமா அல்லது அந்த கிரகத்தின் பருக நிலை மாற்றத்தின்போது குளிர் காலத்தில் ஏற்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

செய்தி: தற்ஸ்தமிழ்.கொம்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:44 am | மறுமொழிகள் | Back to Main

Monday, March 03, 2008

பெண்கள் மனக்கணிதத்தில் பலவீனமானவர்கள்.



பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து பெண்கள் மனக் கணிதத்தில் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வயது வந்தவர்களில் நான்குக்கு ஒருவர் மனக்கணக்கில் பலவீனமாக உள்ளனர்.

அதுமட்டுமன்றி இள வயதினர் (25 - 34)களில் ஐந்துக்கு ஒருவர் மனக் கணிதத்தில் பலவீனமாக உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனக் கணக்கில் இள வயதினரை விட திறமைசாலிகளாக உள்ளனர்.

கணணியும் கணிதப்பொறியும் கணித உலகை ஆளும் போது மனக் கணக்கு எப்படி மனிதனை ஆள முடியும்..??!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 am | மறுமொழிகள் | Back to Main

Saturday, March 01, 2008

குறட்டை இதய நோய்க்கான அறிகுறி..!



சிலர் தூக்கத்தின் போது பயங்கரக் குறட்டை விடுவார்கள். அண்மையில் அப்படிப்பட்டவர்கள் 12000 பேரை உள்ளடக்கி ஹங்கேரி நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, தூக்கத்தின் போது அதிக சத்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு 34% அதிகமாக இதய நோயும் 67% அதிகமாக strokes (பக்கவாதம்)க்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

ஆனால் அதிக சத்தமில்லாது குறட்டை விடுபவர்களில் இந்தப் பாதிப்பு அவதானிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆண்களில் 70 வயதைத் தாண்டியதும் குறட்டை விடுவதும் குறைவடைந்து செல்கின்றதாம்..!

எனவே அதிக சத்தத்துடன் குறட்டை விடுறவர்கள் அயலவர்கள் குறித்து மட்டுமன்றி தங்கள் உடலரோக்கியம் நோக்கியும் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது அல்லவா.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:45 pm | மறுமொழிகள் | Back to Main